Friday 25 May 2012

கொஞ்சம் பழசுதான் (எல்லாம் ஒரு விளம்பரம்தான்)

என் வாலில் கிடந்த சில தொகுப்புகள்,கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்!

                                                                            


பூஞ்சோலை வீடு
படித்ததில் பிடித்தது..இல்லை சுட்டதில் பிடித்தது!!!

ஓர் ஏழைப் பையன், அனாதை இல்லத்தில் படித்து வருபவன்...தினமும் பள்ளி முடிந்து,பகுதி நேரமாக சோப்பு போன்ற பொருட்களை விற்று வந்தான்.ஒருமுறை வழக்கத்திற்கு மாறாக..பக்கத்தில் இருக்கும் காலனிக்குச் சென்று..ஒரு வீட்டுக் கதவைத் தட்டினான்! ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.வெயிலில் அலைந்து திரிந்த அவனுக்கு தாகம்+பசி .விசயத்தை கூறினான்..அவளோ ,அவனை அழைத்து ‘உள்ளே உட்கார சொல்லி,ஒரு கிலாஸ் பால் கொடுத்தாள்.மதியம் ஒன்றுமே சாப்பிடாத அவனுக்கு,விருந்து போல் இருந்தது பால்!
தினமும் அந்த காலனிக்குச் செல்லும்போது ,பெண்மணி வீட்டுகுச் செல்வான்,அவள் வீட்டில் நிறைய பூக்கள்,ஆகவே ‘உங்கள் வீடு, பூஞ்சோலை வீடு’என்று அழைப்பான்.அந்த பெண்மணியின் பிள்ளைகள் வெளியூருக்கு சென்றுவிட்ட்தாகவும்,அவளை கண்டு கொள்வதில்லை என்பதுவும் அவனுக்கு தெரியும்.நாட்கள் உருண்டோடின......பையனும் மேற்படிப்பைத் தொடர சென்றுவிட்டான்.
சில வருடங்கள் கழித்து,அதே காலனிக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை!ஒரு வயதான பெண்மணியைச் கொண்டு வந்து சேர்த்தனர் அங்குள்ள முதியோர் இல்ல உறுப்பினர்!’இவருக்கு யாருமில்லை,அவருடைய நோயக் குணபடுத்த இந்த மருத்துவமனைத்தான் சிறந்த்து’என்று மருத்துவர்கள் கூறி விட்டனர் என்றும் வேண்டிக்கேட்டுக்கொண்டனர்.ஆனால் அங்குள்ள மருத்துவர்களோ ‘இது தனியார் மருத்துவமனை,சிகிச்சைக்கு நிறைய பணம் கட்ட வேண்டி வருமே!எதுக்கும் நாங்கள்,chief doctor-ஐ வந்து பார்க்கச் சொல்கிறோம், என்று தயங்கினர்!
விசயம் chief doctorக்கு போனது.!கிழவிக்கு சிகிச்சையும் முடிந்த்து,வீட்டுக்குப் போக தயாரானாள்.தாதியர்களிடம் கிழவி ,நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?என்று வினவினாள்.அவர்களும் chief doctor ’உங்களிடம் இதைக் கொடுக்கச் சொன்னார்’என்று ஒரு துண்டுச் சீட்டை,அவளிடம் நீட்டினர்:அதில் எழுதப்பட்டிருந்த்து:
>
>
.‘பூஞ்சோலை வீடு,ஒரு கிளாஸ் பால்”!!
நெகிழ்ந்து போனாள் கிழவி!(தர்ம்ம் தலைக்காக்குமோ??)
நன்றி Readers Digest magazine
தமிழாக்கம்:அடியேன்selvisk

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
தியாக தாய்
இரவு 9.30 குடும்பத்தோடு படம் பார்க்கும் அம்மா,எழுந்து 'சரி நான் படுக்க போறேன்னு' மேல் மாடிக்குப் போய் துணிகளை iron பண்ணுகிறாள்,பிறகு எல்லா படுக்கை அறைகளையும் ஒழுங்கு செய்கிறாள்,சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொதிக்க வைத்து பிள்ளைகளின் பள்ளி bottles - களில் நிரப்புகிறாள்,துணிகளை washing machine-போடுகிறாள். அப்புறம் நாளை breakfast-க்கு தயார் செய்கிறாள்.சாப்பிட்டு வைத்த மங்கு பாத்திரங்களைக் கழுவி வைக்கிறாள்.படமும் முடிகிறது மணி சுமார் 11.00 ஆகிறது.பிள்ளைகள் மேல் மாடிக்குப் போய் .'அம்மா இன்னும் நீங்கள் தூங்கலையா,அப்பவே மேல் மாடிக்கு ஏறீனீங்க என்று கேட்கிறார்கள்??? ( இதுதாங்க நாங்க ,தியாக தாய்)
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஆத்திரக்கார அப்பன்
புதிதாக வாங்கிய காரை,அப்பா கழுவிக்கொண்டிருக்க ,5 வயது மகன் அப்பாவோடு சேர்ந்து காரை கழுவும் சாக்கில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து கார் முழுதும் ஏதோ கிறுக்குகிறான்.அதைக் கண்ட முரட்டு அப்பன் பிள்ளையை அடித்து , ஒரு கட்டையை எடுத்து பிஞ்சு விரல்களை கண்மூடித்தனமாக அடிக்க , அன்புத்தாய் ஓடி வந்து பார்க்கிறாள்.கையில் ரத்தம் ஒழுக ஓடுகிறாள் டாக்டரிடம்.அந்தோ பரிதாபம்?? ஒரு சில விரல்கள் அகற்றப்படுகின்றன.மழலை மொழியில் பிள்ளை அப்பனைக் கேட்கிறான் 'அப்பா இனிமேல் எனக்கு எப்போ இந்த விரல்கள் வளரும்? முட்டாள் அப்பன் வெளியே போய் புதிய காரை உதைக்கிறான்,செய்வதறியாது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காரை உற்று நோக்குகிறான் ,பிள்ளையின் கிறுக்கலை அப்போதான் பார்க்கிறான் 'dad i love you'

(ஆத்திரக்கார அப்பனுக்கு புத்தி மட்டோ??????)
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
அன்னையர் தினம்
இந்த இனிய நாளில் ,நான் படித்த ஒரு கதையைப பகிர்ந்து கொள்ள விரும்புகுறேன் ......(ஐந்தாம் படை )
ஒரு பணக்காரன் ,ஒரு நாள் செல்ல பிராணிகள் விற்க்கும் கடைக்கு செல்கிறான். அங்கே தன் நண்பனை பார்க்கிறான் .நண்பனும் விசாரிக்கிறான் ,என்ன வாங்க வந்தாய் என்று கேட்கிறான். அதற்க்கு பணக்காரன், ஐயர் நேற்று வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்தபின், "உங்கள் வீடு ராசி எண் 5 ஆனால் நீங்கள், மனைவி மற்றும் 2 பிள்ளைகள் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர் .ஆகவே இன்னும் ஒரு உயிர் வீட்டில் இருந்தால் மிக சிறப்பு என்றார் .அதனால்தான் எதாவது ஒரு செல்ல பிராணி வங்கி போகலாம் என்று வந்தேன் என்றான் .நண்பனும் அப்படியா ,நாளை ஒரு அருமையான ஜீவனை அழைத்து வருகிறேன் என்று கூறுகிறான் . அந்த ஜீவன் உங்கள் வீட்டிற்கு நல்ல ஐந்தாம் படை.
மறுநாள் நண்பன் காரில் வந்திறங்கி ,பணக்காரனை அழைக்க ,ஆசையை ஓடி வருகிறான் அவன்,எங்கே அந்த ஐந்தாம் ஜீவன் ?என் ராசி ,எனக்கு செல்வம் கொடுக்கப் போகும் உயிர் என கேட்க நண்பன்
காரை திறக்க வெளியே வருகிறாள்......முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த பணக்காரனின் தாய் !!!!!!இவர் உன் வீட்டில் இருந்தால் ஆயிரம் பொன் என்று சொல்லி நண்பன் விடை பெறுகிறான் ......வெட்கத்துடன் ஓடோடி வந்து தாயை தாங்கி கொள்கிறான் ??????
(நன்றி எழுதியவருக்கு )

````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஏன்?ஏன்?ஏன்?..எனக்கு மட்டும் ஏன் இப்படி??
-ATM Machine-la க்யூவில் நின்னு,என் turn வந்ததும் ‘out of service'காட்டும்!

-எல்லா காரும் ஸ்மூத்தா போகும்,என் கார் போகும் போது மட்டும் சிகப்பு விளக்கு வந்திடும்!

-எனக்கு பிடிச்ச பாடல் ஒளியேறும்போது,வானொலி ஒரே இரைச்சல்,பாடல் முடியும் வரை மட்டுமே!

-hospitalil-la என் turn வந்ததும்,அப்போதான் என் டாக்டர் லீவுலே,போய்ட்டாருன்னு சொல்லுவாங்க!

-போனில் நண்பர்களுடன்,ஜோரா ஊர்க்கதை பேசிக்குட்டு இருக்கும்போதுதான்,பிள்ளைகள் ஹோம்வோர்க் கேட்பாங்க,வீட்டுக்காரு காப்பி கேட்பாரு,line cut cut ஆகி வரும்!

-கடையிலே ஏதாவது வாங்கலாம்ன்னு போனா,அப்பத்தான் நான் தேடும் பொருள் ஸ்டாக் இருக்காது!

-கோயில் அன்னதானம் ,பசியோடு க்யூவில் நின்னு,என் turn வந்ததும்:ஒன்னு சாதம் முடிஞ்சிருக்கும்,இல்லை தட்டு இருக்காது,இல்லாட்டா யாராவது வயசானவங்க வந்து ‘என்னை முதலில் விடும்மா’ன்னு சொல்லுவாங்க!

-இதையெல்லாம் சகித்துக்கொண்டு ,முகநுலுக்கு ஆசையாக வந்தால்,அப்பத்தான் internet problem,pc hang ஆகிடும், டைப்படிச்ச போஸ்டிங் காணமல் போயிருக்கும்!

ஏன்,எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்குது?
ராகுவும் கேதுவும் ஒன்னா பின்னிக்கிட்டு இருக்காங்களா??

**ஏதும் பரிகாரம் இருக்கா??
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````

நெஞ்சை நெகிழ வைத்த ‘தில்லாலங்கடி’பட வசனம்!!


’அந்தப் பையன் அனுவரைப் பார்,இன்னும் நான்கு நாட்களுக்கு மேல் உயிரா இருப்பான்னு சந்தேகம்தான்,அது அவனுக்கும் தெரியும்!இருந்தும் , இறக்கவிருந்த தன் ஸ்நேகிதி பிழைத்து வருகிறாள்ன்னு எவ்வளவு சந்தோசமா எல்லோருக்கும் இனிப்புக் கொடுக்கிறான்!!இப்போ சொல்லு தம்பி,அதுங்க நோயாளியா??இல்லை நாம் எல்லோரும் நோயாளியா???
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
படித்ததில் ரசித்தது;
ஒருமுறை,அன்னை தெரேசா மும்பை செல்ல விமானநிலையம் செல்கிறார்.அந்த சமயம் விமானம் சற்று தாமதமாகும் என்று அறிவிக்கப்படுகிறது!அன்னையின் மானேஜர் சற்றே தயங்கியபடி:அம்மா விமானம்,தாமதமாகும்..ஆகவே..என்று முடிப்பதற்குள்,அன்னை ‘பரவாயில்லை நான் இன்று காலையில் தியானம் செய்யவில்லை...எதையோ தவறவிட்டதுபோல் ஓர் உணர்வு,ஆகவே இந்த தருணத்தைப் பயன்படுத்தி ,அதை செய்கிறேன்’ என்று கூறிக்கொண்டே ஜபமாலையைக் கையில் எடுக்கிறார்.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
கேட்டுப் பூரித்து போனேன்:(சுகி சிவம்)
ஒரு நாட்டின் மிக சிறந்த பிரதமர்,ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறப்பு செய்கின்றனர்!,பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கின்றனர்;உங்களின் இந்த வெற்றிக்கு யார் காரணம்,அஸ்திவாரம் என்றெல்லாம் கேட்க,பிரதமரும் ‘என் ஆசிரியர் என்கிறார்.பத்திரிக்கையாளர்கள்,ஆசிரியர் விட்டிற்கு படையெடுக்கின்றனர்.ஆசிரியரை நிறையக் கேட்கின்றனர்,இறுதியாய் ஒருவர்,’ஏன் ஐயா?உங்கள் மாணவன் ஒரு பிரதமராக ஆகிவிட்டார்,நீங்கள் இன்னும் ஆசிரியராகவே இருக்கிறிரே?’என்று கிண்டல் செய்ய,அதற்கு ஆசிரியர் தன்னடக்கமாக ‘நான் பிரதமரானால் ஒரு நாட்டை மட்டுமே உருவாக்குவேன்!அதுவே நான் ஓர் ஆசிரியராக இருந்தால் இன்னும் நூறு பிரதமரை உருவாக்குவேன்’என்றாராம்!!
(என்னால் ஒரு நல்ல குடிமகனையாவது உருவாக்க முடியும்)

````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஏன்?ஏன்?ஏன்?
ஏனோ,மீன் மற்றும் கோழி வெட்டி சுத்தம் செய்யும் பொழுதுதான்,தலை அரிக்கும்??
கையில் நிறைய பொருட்கள் இருக்கும் பொழுதுதான் ,உடம்பில் எறும்பு ஊறும்??
மிளகாய் போன்ற காரமான பொருட்களை வெட்டும்பொழுதுதான்,கண்ணில் ஏதாவது வந்து விழும்??
தோசைக்கு மாவு கரைக்கும்பொழுதுதான் மூக்கில் ஏதோ ஊறும்???
ஏதாவது தேடுவதற்காக பையில் கை விட்டால் தேடுவது கையில் அகப்படவேபடாது????
கைபயில் போட்ட போன், ரிங் கேட்கும்,ஆனால் கையை விட்டு துளாவினாலும் அகப்படவே படாது????
இதெல்லாம் எனக்கு மட்டும்தானா??
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````

நெகிழவைத்த குட்டிகதை!!!!
இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் காதல் கொள்கின்றன.தங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு அளவு கடந்த நேசம்!
அடிக்கடி பெண்ணுக்கும் ஆணுக்கும் சண்டைகூட,’எனக்குத்தான் உன் மேல் அதிக காதல்’எனக்குத்தான் அதிக நேசம் என்று’.
இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வருகின்றனர்.’சரி நம் இருவருள் உண்மை காதல் யாருக்கு என்று பார்க்கலாம்’என சபதம்.அதாவது, நாளை மலர
விருக்கும் இந்த பூவை, யார் அதிகாலையில் முதலில் பார்க்கிறோமோ? அவரே உண்மைக் காதலுக்கு உரியவர்!!!!!
அதிகாலை புலர்ந்த்து!ஆண்,மலருக்கு முன்னால் அமர்ந்து காத்திருக்க மொட்டு அவிழ்கிறது,அவிழ்ந்த மொட்டுக்குள்,பெண் இறந்து கிடக்க கண்ட ஆண் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு தன் உயிரை மாய்ச்சுகிறது!!!!!!
பாதித்த குட்டிகதை!!!!!!!
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
நன்றி திருடனுக்கு,
கோயிலுக்குச் சென்று காரைப் பார்க்,பண்ணி விட்டு,கைப்பையை(ரொக்கம் 1000வெ,ஒரு சில நகைகள்)காரிலே விட்டுட்டு இறங்கினேன்.ஆனால் உள்மனம்;’வேண்டாம் எடுத்துப்போ’என்று சொல்வதுபோல இருந்த்து.!சரி மீண்டும் வந்து,கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே போனேன்,சுமார் ஒரு மணி நேரம் கழித்து,கார் கதவைத் திறந்தேன்...அதற்கு அவசியமே இல்லாமல் கதவு திறந்திருந்த்து!!!ஆ..என்ன ஆச்சு?என்று யூகிக்கும் முன் எனக்கு தெரிந்துவிட்ட்து!ஆம்,என் கார் எப்படியோ திறக்கப்பட்டுள்ளது???ஒன்றும் உடைக்கப்படாமல் ,மிக சுலபமாக திருடன் கைவரிசையைக் காட்டி உள்ளான்!உள்ளே நுழைந்து, முதலில் என் கைப்பயை எங்கே இருக்கு? என பதற்றமாக தேடினேன்!ஆனால் என் கையில்தான் இருந்த்து,எல்லாம் பதற்றம் காரணமே???
இருப்பினும் காரில் உள்ள எதையோ காணவில்லை???அது மட்டும் எனக்குப் புலப்பட்ட்து!!ஆம் என் பிள்ளைகளின் school bags.அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்திறங்கியவுடன்,மழைக் காரணமாக நானே ‘வாங்க அப்புறம் எடுக்கலாம்னு சொன்னேன்.அந்த புத்தகப்பைகளைக் காணோம்!ஒரு கணம் உறைந்து போனேன்’ஏன்னா இந்த வருடம்,என் மகள் அரசு தேர்வு எழுதவிருக்கிறாள்?????என் மகளோ துடித்தாள்,;ஏம்மா கடவுள் என்னைச் சோதிக்கிறார்,ஏதேதோ உளறினாள்..நானோ செய்வதறியாது.......?????சரி அடுத்த என்ன செய்வது??
போலீஸ்கார்ரோ,’அதை வைச்சு,அவனுங்க என்ன செய்யப்போறான்னு என்னிடமே கேட்டார்கள்!என் மகள் இருட்டறையில்,உண்ணாவிரதமிருந்த்தாள்!என் மகனுக்கு இது சாதகமாக இருந்த்துபோல!!ஏன்னா,இனிபடிக்கவேண்டாமே?? அவள், பள்ளிக்குச் சென்று விசயத்தைச் சொல்லிவிட்டு, தேடும் படலத்தில் இறங்கினேன்.’போதைப்பித்தர்கள் அதிகமாக உலாவும் இடம் அது,கண்டிப்பா அவனுங்க அதை எங்கேயாவது விட்டுட்டுப் போயிருப்பானுங்க’எல்லோரும் சொன்ன ஒரே ஆறுதல் வார்த்தை அது???
உலகத்தில் உள்ள,அனைத்துக் கடவுள்களையும் கும்புட்டுக்கிட்டேன்.அவள் வரும் செப்டம்பர் மாதம் பரீட்சை எழுதப்போறாளே???
இரண்டு இரவுகள் ஓடின! என் மகள் பள்ளியிலிருந்து,அன்று காலைப் போன் வந்த்து!’செல்வி,தொலைந்த்து போன ,உங்கள் பிள்ளைகளின் bags பத்திரமாக இருக்காம்,வேறொரு பள்ளியில்,தலைமையாசிரியரின் குரல்!ஆ,மறுகணம் ,அந்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு,ஒடிப்போய் நின்றேன் அந்த மலாய் பள்ளியின் அலுவலகத்தில்!பிறகு விபரம் யாவும் அறிந்தேன்!இரண்டு நாட்களாக ஏதோ,ஒரு பஸ் ஸ்டாப்பில் கிடந்த்தாகவும்,யாரோ ஒருவர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றதாகவும்.அப்பள்ளியின் முதல்வர்,புத்தகங்களில் பள்ளியின் பெயரைப் பார்த்துவிட்டு,டைரக்டரியில் தொலைபேசி எண்களைப் பார்த்து......................என்று எல்லா விபரங்களையும் கூறினர்.
ஐயோ!இறைவன் ரொம்ப பெரியவர்!ஒருக்கால்,பணமே போயிருந்தாலும் சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் கல்வி சமாச்சாரம் ஆச்சே??எல்லாம் பையில் இருந்த்து,விலை உயர்ந்த பென்சில் பெட்டியைத் தவிர!!!!!
முற்றும்.
மலேசிய கார் iswara ,மிக சுலபமாக சாவி இல்லாமல் திறக்கலாமாம்.ஆம்,கதவின் வெளிபுறத்தில் இருக்கும் ரப்பர் பார்-ஐ நெம்பி ..... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,ரப்பர் பாரும்.....!
ஒருசில நேரங்களில்,என் கைப்பையக்கூட ,பிள்ளைகளின் புத்தகபையில் ஒளித்துவைத்துவிட்டு போயிருக்கேன்(இவ்வளவு கனமான bags-ஐ எவன் எடுக்கப்போறான்னு??ஆனால் எடுத்துட்ட்டுப்போய்ட்டானே??
**எது எப்படியோ,கண்ணியமான திருடன் போல,எங்காவது குளம்,குட்டைன்னு வீசாம???
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஒரு உண்மைச் சம்பவம்:
ரொம்ப நாளைக்குப் பிறகு,தோழி ஒருவளை சந்தித்தேன்!ரொம்ப வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால்,அவள் வீட்டிற்குச் சென்றேன்.சுமார் 90 வயது அவளுடைய பாட்டி(10 வருசமா) படுத்தப் படுக்கையாக துன்பப்பட்டு வந்தார்.நான் அவர்களைச் சந்தித்து வீடு திரும்பினேன்.மறு நாள் தோழி தொடர்புகொண்டு,பாட்டி இரவு இறந்து விட்டதாக கூறினாள்.இறப்புக்குச் சென்றேன்.எல்லா நண்பர்களும் சென்றோம்.தோழியும் என்னைக் கண்டதும்;செல்வி ,பாட்டி இறந்த நேரம் பார்க்கப் போன இடத்தில்,’உங்கள் வீட்டிற்கு ஏதோ ஒரு சக்தி வந்துபோனதால்தான் ,இழுபறியாய் கிடந்த பாட்டி போய்ட்டாங்க என்றாள்.கதையை உற்று கேட்டுக்கொண்டிருந்த நண்பன் சிவா ,என் காதருகே வந்து ’செல்வி எங்க வீட்டுக்கும் வந்து போங்க..எங்க தாத்தாவும்(82 வயது) ஒரு அஞ்சு வருசமா பாடாய் படுத்துரார் என்றான் சிரிக்காமல்..???? நானோ வாய்விட்டு சிரித்து ,விஷயம் காட்டுத் தீப் போல் அங்கே பரவியது!!!!

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்
நேற்று, மகிழுந்தில் போய்க்கொண்டிருக்கையில் ,என் முன்னே ஒரு இளைஞன் இரண்டு சக்கர வண்டியில் ஒரு வயதான அம்மாவை ஏற்றிக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தான்.திடீரென மழை லேசாக தூறத் தொடங்கியது.உடனே அந்த வண்டியில் சென்றுக்கொண்டிருந்த அந்த அம்மா தன் பையில் கையை விட்டு வேகவேகமாக எதையோ இழுத்தார்.வெளியே வந்தது ஒரு நெகிழிப் பை.அதை எடுத்து மழைத் தன் மகனை நனைக்கும் முன்னே அவனைப் போர்த்தி விடுகிறார் அந்தத் தாய்.மழை வேகமாக பெய்கிறது.வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.இளைஞன் நனையாமல் செல்ல பின்னால் அம்ர்ந்திருந்த தாய் முழுதும் நனைந்தாள்.அன்பின் இலக்கணம் அன்னையன்றோ!!!!
``````````````````````````````````````````````````````````````````````````````````````````  

8 comments:

  1. //இளைஞன் நனையாமல் செல்ல பின்னால் அம்ர்ந்திருந்த தாய் முழுதும் நனைந்தாள்.//
    அந்தி மழையில் அன்னை நனைய, அன்னையின் அன்பு மழையில் அந்த இளைஞன் நனைந்தான்.

    ReplyDelete
    Replies
    1. அருமையா சொல்லிட்டிங்க ஆபிசர்!அன்பே அன்பைப் பற்றி சொல்வதுபோல

      Delete
  2. //பூஞ்சோலை வீடு,ஒரு கிளாஸ் பால்”!!//
    நெகிழ வைத்த படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. இது ஓர் ஆங்கில கதை ஆபிசர்

      Delete
  3. பூஞ்சோலை வீடு,ஒரு கிளாஸ் பால்”!!
    நெகிழ்ந்து போனாள் கிழவி!(தர்ம்ம் தலைக்காக்குமோ??)//

    தர்மம் தலையை மட்டுமில்லை செல்வி உயிரையும் காக்கும்....!!!

    ReplyDelete
    Replies
    1. அனைத்து பதிவுகளிலும் ஊக்கமான கமெண்ட் போடும் மனோவிற்கு நன்றி

      Delete
  4. நெகிழ்ச்சியான கதை மனசை தொட்டுவிட்டது...!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த ரைட்டரைபோய் சேரட்டும் மனோ!நன்றி சகோ.

      Delete