Tuesday 31 December 2019

விடைகொடுக்க மனமில்லை!

       இதை நான் சொல்லியே ஆகணும்!
2018 இறுதியில், ஒரே குழப்பத்தில் இருந்தேன்.எல்லாம் சரியாகிவிடும் என்ற குட்டி தைரியத்தில் கால் எடுத்து வைத்தேன்!நம்மைப்பிடித்த பாதி தொல்லை தீர்ந்தது என மனதைத் தேற்றிக்கொண்டேன்!
        2019 முற்பகுதியில், ரொம்பவே போராட்டம்.நீயா?நானா? என ஒருபுறம், பணப்போராட்டம் ,தீராத சளிகாய்ச்சல் என அனைத்தையும் ஒவ்வொன்றாக எதிர்கொண்டு வந்தேன்!
அரைவருடம் கழிந்தது!அப்போதும் போராட்டம்!
           மாதங்களில் எனக்குப்பிடித்தது அக்டோபர் மாதம்(காரணம் நான் சின்னைப்பிள்ளையாக இருக்கும்போது அக்டோபரில் தொடங்கும் நீண்ட பள்ளி விடுமுறை,தீபாவளி,பாட்டி வீடு பயணம் இப்படி சில குட்டி குட்டி மகிழ்ச்சிகள் வரும்  என்பதால்)!
                அக்டோபரில் கால் எடுத்து வைத்தேன்,!ஒவ்வொரு பிரச்சனைகளாக கழிந்தது!கொஞ்சம் நிம்மதியுடன் உலா வந்தேன்! நவம்பர் பிறந்தது!பள்ளி விடுமுறை, மகனின் பள்ளி வாழ்க்கையில் இறுதி அரசு தேர்வு முடிந்தது,வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் என அடுக்கடுக்காய் மகிழ்ச்சி!
             ஒருவழியாக டிசம்பர் வந்தது!அக்கா வீட்டில் நான் திட்டமிட்டதுபோலவே சுபகாரியம்,ஆசிரமத்தில் வழிபாடு,கோவை குடும்ப சந்திப்பு என தொடர் மகிழ்ச்சி!எல்லாத்துக்கும்
 மேலே நானும் பிள்ளைகளும் திட்டமிட்டபடி  இந்திய சுற்றுலா!
நினைத்ததுக்கும் மேலே மகிழ்ச்சியாய் அமைந்தது சுற்றுலா!
          மிகுந்த திருப்தியுடன் நாடு திரும்பினேன்!ரொம்ப நாட்களாக காலைச் சுற்றிய பாம்பு போல ஒரு பிரச்சனை!நாடு திரும்பியவுடன்,நான் எதிர்ப்பார்த்தது போலவே எந்த மனஸ்தாபங்களும் இல்லாமல் என்னை விட்டு அதுவாகவே விலகியது!இதைவிட வேற என்ன வேண்டும்?
                (தமிழ்நாடு செல்ல திட்டமிட்டதன் முதல் காரணம் ,கேரளா சென்று திருச்சூரில் அமைந்துள்ள திருஅஞ்சகளம் தலம் சென்று சாமி தரிசனம் பார்க்கவேண்டும் என்பதே!அதேப்போல அந்த தலம் சென்று தரிசனம் கண்டு கோவைச் சென்றோம்!அந்த மண்ணை மிதிப்பதே பெரிய விசயம்!தலம் செல்வது மிகவும் புனிதமான ஒன்று!சாமி தரிசனம் இன்னும் சிறப்பு!இனி எல்லாம் செல்விம்மாவுக்கு சிறப்பு  என பேரூர் ஆதினம் , குரு மகா சன்னிதானங்கள் மற்றும்  டாக்டர் ஜெயபிரகாசம் ஐயா கூறியது ரொம்பவே உண்மை என உணர்ந்த தினம் 31/12/19!)
ஆகவே மனமின்றி விடைகொடுக்கிறேன் 2019 ஆண்டுக்கு