Thursday, 9 July 2026

சென்னையில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு


சென்னையில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு  

சென்னையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும்  உலகத்தமிழ்

 கல்விக் கழகம் இணைந்து நடத்திய  4வது புலம்  பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2026 ஜூலை 2 தொடங்கி ஜுலை 5 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனிதே நடந்துமுடிந்தது.

இம்மாநாட்டில், மலேசியாவைத் தலைமை வகித்து முனைவர் இளந்தமிழ் ,முரசு அஞ்சல் முத்து,முனைவர் செல்வஜோதி உட்பட சுமார் 40 பேராளர்கள் கலந்துகொண்டனர்.மேலும் சிங்கப்பூர்,அமெரிக்கா,மொரிசியஸ் ,ஆஸ்திரேலியா,இலங்கை,ஹாங்காங் ,துபாய்,அயர்லாந்து  ஆகிய நாடுகளில்  இருந்து  பெரும்பாலான  தமிழ்  அறிஞர்கள் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment