Tuesday 7 February 2012

பத்துமலையில் தைப்பூசம்!

பத்துமலை என்றாலே தைப்பூசம்,தைப்பூசம் என்றாலே பத்துமலைதான் (எங்களுக்கு)நினைவில் வரும்!காரணம் பிறந்தவீட்டிலும் சரி ,புகுந்த வீட்டிலும் சரி,நான் தைப்பூசம் என்றாலே பத்துமலைக்குத்தான் செல்வேன்!சிவவழிபாடெல்லாம் இருபது வயதுக்கு பிறகுதான் ஈடுபட செய்தேன்!சிறுவயது முதல், என் பெற்றோர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த சாமி அந்த முருகபெருமானே!!!
                                                                              
         சென்றவருடம் தொடங்கிய  நேரடியாக பத்துமலை அடிவாரத்தில்,கொண்டு போய் பக்தர்களைச் சேர்க்கும்  மின்ரயில்(commuter)சேவையைப் பாராட்டியே ஆகணும்!!ஏனென்றால் ,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவை??)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுது???என்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே  சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையே???மிகுந்த களைப்பில் நானும் ,கால்வலியில்(இன்று மலை ஏறவில்லை,ஞாயிறு ஏறிய பொழுது ஏற்பட்ட கால்வலி)ரயிலை விட்டு இறங்கி அக்கரைக்கு மாடிப்படியில் ஏறி(பத்துமலை ஏறாததால் தண்டனை போல??)அங்கே போய் காத்துக்கிடந்தேன்!!!!!(இது வீட்டுக்கு வரும்பொழுது)
                                                            
            காலையில் ரயிலைப்பிடித்து,ஒருவழியாக பத்துமலையை அடைந்தோம்!முதலில் நான் தேடிய இடம்??வேறு என்ன ??இலவசமாக வழங்கும் பசியாறைதான்!!!!பட்டினியாக சாமி கும்பிடச்சொல்லி யாரு அடிச்சா??கூட்ட நெரிசலில் ,ரயிலை விட்டு இறங்கி,மலைமேல் இருக்கும் முருகனை ,கீழிருந்தவாறு கையெடுத்து கும்பிட்டு ..புத்தக கடைக்குச் சென்றோம்(என்க்கு இல்லை,என் பொண்ணுக்கு புத்தகம் வாங்க)

           ஒருவழியாக என்னுடைய ஸ்பாட்டை அடைந்தேன்,அங்கே பணியில் சாரி சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்  பாராட்டியே ஆகணும்!         ஆம்,வீட்டில் ஒரு பிடி சமைக்கவே யோசிக்கும் நாம் ,இங்கே லட்சபோ லட்சம் மக்களுக்கு ,உடனுக்குடன் சுட சுட சமைத்து ,பரிமாறும் தொண்டூழியர்களை இறைவன்ஆசிர்வதிப்பாராக!முகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்றும் களைப்பில்லாமல் பரிமாறுவது சுலபமா என்ன??பல சங்கங்கள் இதுபோன்ற அன்னதானங்களை வழங்க முன்வருகின்றனர்!ஆனாலும் அதை சரியான முறையில் நம் ஆட்கள் பயன்படுத்திக்கொள்ளாத்ததுதான் கவலையே??

           கொடுக்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு ,ஆங்காகே தூக்கி எறிந்து செல்லும் பக்தர்களை வீட்டில் என்ன நன்னெறி சொல்லி வளர்த்திருப்பாங்களோன்னு கேட்க தோணும்??அள்ளிக்கட்டிக்கிட்டு போகும் பக்தர்கள் ,அதை மற்றவர்கள்க்காவது கொடுக்கலாம்  ,இல்லை முறையாக எடுத்துச்செல்லாம்!ஆசை யாரை விட்டுச்சு??ஆனாலும் நாங்கள் அப்படி இல்லை,வாங்கி உடனுக்குடன் அங்கேயே நின்று(இடம் தேடி உட்கார பொறுமை இல்லாததால்)சாப்பிட்டு ,குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தோம் என்று சொல்வதில் பெருமை படுகிறோம்!அதுக்கும் ஒரு கதை இருக்கு !பிறகு சொல்கிறேன்.                                         
                                                                     
         தைப்பூசம் என்றாலே எனக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகள் நினைப்பு வாட்டும்!!!அதிலும் இலவச மோர் கொடுப்பாங்களே,வெயிலில் நடந்து சென்று களைப்பு தீர குடிக்கும் பொழுது ,பாபிலோன் தொங்கும் தோட்டம் கண்களுக்கு தெரியும்!அப்படி ஒரு சுவை!மலேசியாவில் பிரசித்திப்பெற்ற எவரிடே பால் மாவு கம்பெனிக்காரர்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் மோர் ,தனி சுவை!!முகம்சுளிக்காமல் பாட்டில்களை நீட்டினால்,அதிலும் ஊற்றி கொடுக்கும் தொண்டூழியர்களை எப்படி பாராட்ட??
சுமார் 5 கிண்ணமாவது வாங்கி குடித்தேன் !அம்புட்டு ருசி!
  
       ஆனாலும் அங்கே நடந்த சில சம்பவங்களைத் திட்டாமல் இருக்கமுடியவில்லையே??என்ன ஒரு அலட்சியம்??கொடுக்கப்படும் உணவுகளை,சரியாக சாப்பிடத்தெரியவில்லை ஆனாலும் அங்கேயே கிடத்திவைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில் போடலாமே??சிலருக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு ,அதாவது ’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்!உதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பது??இங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவது??பக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்ட்யில் குப்பைகளைப் போடாமல் ,கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய பெருமைக்குரிய நம்மவர்களை எப்படி,என்ன சொல்லால் திட்டலாம்?????                                                             
                                                                         
                  யாரோ வீசிய குப்பைகளை பொதுசேவை ஊழியர்கள் ‘சுய விருப்பம்’என்ற ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு ,அந்த குப்பைகளை அகற்றிய காட்சி நெகிழ வைத்தது!!ஹ்ம்ம்ம்,புத்த மத இயக்கத்தைச் சார்த்தவர்கள் ,இதையும் ஒரு சேவையாக(நாம் போட்ட குப்பைகளை)செய்தனர்!அதைப்பார்த்ததும் படம் பிடித்துவிட்டு கை கொடுக்க எண்ணினேன்,அவர் கையுறைப்போட்டிருந்தார்,மேலும் அழுக்கான கைகள்,ஆகவே ஒரு புன்னகையோடு நன்றி சொன்னேன்!ஆனால் ,அவ்ர் அதைப்பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார்!அவருக்கு ஒரு சபாஷ்!!!                                                             
                                                                            

                 எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது,ஏதோ ஒன்னும் சேர்ந்து காயுதுன்னு சொல்வதைப்போல,’உங்களுக்குத்தான் திருவிழா,எங்களுக்கு ஏண்டா தலையெழுத்து இந்த வெயிலில் சாகனும்னு கேட்பதுபோல்’அங்கே கடமையில்(கடும் கடுப்பில்)ஈடுபட்டிருக்கும் காவல் அதிகாரிகள்,தீயணைப்பு வீரர்கள் மற்றும் செம்பிறைச்சங்க ஊழியர்களையும் சல்யூட் பண்ணவேண்டுமே!!இருப்பினும் நம்மவர்கள் அவர்களோடு நெஞ்சை நிமித்துக்கொண்டு சண்டைப்போடுவது இருக்கே??இன்னொரு தகவல்,கடந்த சனிக்கிழமை பத்துமலையில்,ஒரு போலிஸ்காரரை வெட்டிக்கொன்றனர் நம் இளைஞர்கள்(திருவிழாவில் சண்டை போடாவிட்டால் ,பொழுது புலராது??)பாவம் அந்த போலிஸ்காரர்(நல்ல வேளை ,அடிச்சவனும் தமிழனும்,இறந்தவனும் தமிழன்)வேற்று இனம் என்றால்...எல்லாத்துக்கும் உரிமம் வழங்கப்பட்டிருக்காதே????        

          பிரதான நுழைவாயிலை விட்டு வெளியே வந்து காவடிகளைப் பார்த்தோம்!கொஞ்சம் நிம்மதியாக இருந்தது!விதிமுறைகளைப்பின்பற்றி ,காவடிகள்,அலகுகள் கொண்டுவந்தனர்!இருப்பினும் ஒரு சிலர்,அட்டகாசமான   சேட்டைகள் செய்யாமல் இல்லை என்றே சொல்லலாம்!அப்பா காலத்தில்,எப்படியாவது எங்களை வருடா வருடம்(மிக குறைவான வசதிகளே)அழைத்துச் சென்று ,எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டுவார்!!!
இப்போ எங்கள் பிள்ளைகள் அதுவும் இரண்டு பசங்களை(நாங்க 7 பேர்)கூட்டிப்போக கஷ்டமாக இருக்கு!!!வெளியேறும்போது ,வேலவனின் வேலைக்கண்டேன்!
                       ‘உன் அறிவு, என் வேலைப்போல் அகன்றும் ,கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எங்கோ படித்த நினைவுடன் வீடு திரும்பினேன்!
                                                                                    

Friday 3 February 2012

சிறார் பாலியல் சித்ரவதை!!!

அண்டத்தை ஆண்டுக்கொண்டிருக்கும்,அரன் எங்கோ ஆனந்தத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க , இங்கே இந்த அவலங்கள் அரங்கேற்றமாகின்றன???பால் குடி மறவா,பிஞ்சுகள் ‘பாலியல்’என்ற அரக்கன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றன!!!!கேவலமான இந்த செயல்கள் ,ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மனிதன் என்ற நாய்களால் நடத்தப்படுவதுதான் மிகப்பெரிய
வேதனை!!
                                                                                                                 
                
             முன்பெல்லாம் கற்பழிப்பு பற்றிய  செய்திகளை , நாட்டில்  எங்கோ ஒரு மூலையில்தான் கேட்டிருப்போம் ஆனால் தற்பொழுது நிமிடங்களுக்கு இத்தனை சம்பவங்கள் என் புள்ளி விவரம் காட்டுது!சிறார் பாலியல் சித்ரவதை என்ற வருத்தமான செயல்களும் அப்படியே?????இதில் வேடிக்கை என்னவென்றால் ,இது போன்ற செயல்களைச் செய்பவர்கள் வழிப்போக்கர்களோ அல்லது அறிமுகம் அல்லாதவர்களோ கிடையாது ,மாறாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் ,குழந்தைகள் காப்பக உறுப்பினர்கள்(எல்லோரும் அல்ல?)வீட்டு வேலைக்காரர்கள் மேலும் குழந்தைகளைப் பராமறிக்க விட்டு செல்லும் வீட்டில் உள்ள நபர்கள் ,மேலும் அம்மாவின் இரண்டாம் கணவன் ,அப்பாவின் இரண்டாம் மனைவி என் நன்கு தெரிந்த முகங்களே!!!!!
                                                                      
           பல சம்பவங்கள் ,வெட்டவெளியிலும் ,பொது இடங்களிலும்தான் நடக்கின்றன என்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!அதாவது குழந்தைகளை(ரொம்ப அன்பாக) உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போலவும்,பிஞ்சுகளின் பாலியல் உறுப்புகளைத்  தடவுதல் போன்றவையாகும்!ஒரு சில சம்பவங்கள்தான் ,ரகசியமாக செயல்படுத்தப்படுகின்றன!நடப்பவை நடக்கட்டும் நமக்கென்ன என்றில்லாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்போமே!ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கின்றனர் ஆனால் பல வீடுகளில் பிள்ளைகளுக்கு உணவு ,பணம்,சொகுசு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டால் போதும் என்றே நினைக்கின்றனர் பெற்றோர்கள்.இது சரியா??
                                                                        
            இந்த சிறார் பாலியல் சித்ரவதைப்பற்றிய ஆய்வு(பாடம் கூட) ஒன்றினை அண்மையில், மலேசிய மகளிர் குடும்ப மேம்பாட்டுத் திட்டம் நடத்தியது.அதில் கலந்து கொண்டு பல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்புக்கிட்டியது,பல திடுக்கிடும் தகவல்கள் என்றே சொல்லலாம்.ம்ம்ம்ம்,அம்மாவின் இரண்டாம் கணவன்(ஒரு சிலரே)இந்த செயல்களை செய்கிறான் ,பிறகு குழந்தைகளிடம் ,’யாரிடமாவது சொன்னால் ,உங்கம்மாவை கொலை செய்வேன் என்று மிரட்டுதல்,சொந்த அப்பாவே செய்கிறான் ,குழந்தைகளிடம் ‘நீ யாரிடமாவது சொன்னால் ,நான் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் என்றும் பிறகு உங்களுக்கு யார் சம்பாதித்துக்கு கொடுப்பாங்க’என்றும் செண்டிமெண்ட் பேசுவார்களாம்???வீட்டில் நம்பிக்கையாக வேலைக்காரர்களிடம் விட்டுச் செல்லும் குழந்தைகளிடம் வேலைக்காரர்கள் (ஒரு சிலரே)கைவரிசையைக் காட்டுகிறார்கள்.இங்கேயும் மிரட்டல்தானாம்!!யாரிடமாவது சொன்னால் ,உங்கள் விட்டில் எல்லோருக்கும் உணவில் விசம் வைத்துக்கொள்வேன் என்பதுதான்??இவைகளுக்கெல்லாம் பயப்படும் சிறார்கள் ஊமையாக்கப்படுகிறார்க்ள்!
                                                        
                     வேலைக்காரர்கள் என்றவுடன் ,அண்மையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ,ஒரு செய்தியைக் கேட்டு உறைந்து போனேன்.அந்த வீட்டில் அப்பா ,அம்மா ,பையன் மற்றும் வேலைக்காரி(எந்த இனம் என்பது ரகசியம்)!குடும்பத்தோடு ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடுகள்!முதலவதாக மருத்துவப்பரிசோதனை!!சற்றும் எதிர்பாராத, அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தி அம்பலமாகிறது!இரத்தப் பரிசோதனையில் ,பெற்றோர்களுக்கு ஒன்றும் இல்லை,பையனின் இரத்தம் ‘ஹ்ச்.ஐ.வி +’?????தாய் மயங்கி விழுகிறாள்,அப்பாவுக்குப் பைத்தியமே பிடிக்கிறது!விசாரித்ததில் ,வேலைக்காரி பையனுடன் பாலியல் செயல்களில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகின்றன,வீட்டில் சொன்னால்..குடும்பமே காலி,என்றும் பையன் மிரட்டப்பட்டுள்ளான்????ஐயோ ,இனி என்ன செய்வது,கண்ணுக்கெட்டிய பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்???’நாங்கள் வேலை வேலைன்னு போயிட்டோம்,இன்று என் பையனின் எதிர்காலம் போச்சேன்னு கதறுகின்றனர்,வேலைக்காரிக்கு தண்டனைக் கொடுக்கலாம், என்ன  பயன் ??பையனின் உயிர் ???
                                                                
         மலேசியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,ஏழே வயது நிரம்பிய பெண் பிள்ளையின் அகோர பிணம் ,கைப்பையில் திணிக்கப்பட்டு ,ஒரு கடைத்தெருவில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது!நாட்டையே உலுக்கிய சம்பவம் அது!பிள்ளையை, பாசார் மாலாம்(இரவு சந்தையில்)கடத்திக்கொண்டுபோய்,ஒரு பொம்மையை இஷ்டப்படி என்னவெல்லாம் செய்யலாமோ,அப்படியெல்லாம் அந்த காமுகன் செய்துள்ளான்.அவன் ,அக்குழந்தைக்கு செய்த கேடுகெட்ட செயல்களை எழுத்தால் எழுதுவதோ,சொல்லால் சொல்லுவதோ அவ்வளவு சுலபமல்ல???பிள்ளையின் பிறப்புறுப்பில் ஏதோ ஆயுதங்களை நுழைத்து ,கொலை செய்துள்ள விசயம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்த்து!தகவல் ஊடகங்களில் ,யாருடைய வீட்டிலாவது பெண்பிள்ளை காணாமற் போயிருந்தால் ,உடனே இந்த பிரேதத்தை அடையாளம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டது!அந்த பெண் பிள்ளையின் பெற்றோர்கள் ,பிரேததைக் கண்டு .இது எங்கள் பிள்ளை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிள்ளை அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்!DNA சோதனையில் ,’என் பிள்ளை இல்லை என்று சொன்ன பெற்றோர்களே ,அந்த பிணத்துச் சொந்தம் என்று அழைக்கப்பட்டனர்!!
       பிள்ளையின் இறுதி சடங்கை வழிநடத்திய ‘ustaz' இறுதிகட்டத்தில் ,இப்படியும் மோசமாக கொலை செய்வார்களா என்று எண்ணி அழுத காட்சி ,இன்றும் என் கண்ணில் நிழலாடுகிறது??செய்தவன் மனிதன் தானே??போதை அடிமையாகத்தான் இருக்க முடியுமாம் காரணம் அவனுக்கு மட்டுமே தான் என்ன செய்கிறோம் என்பதை அறிய முடியாதாம்?????
                                                                                                                              
      
           இனி நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று ஒரு கண்ணோட்டமிடுவோம்!முதலில் ,மழலைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்டுத்த வேண்டும்!தாயோ தகப்பனோ ,ஒரு காலகட்டம் வரையில்தான் குழந்தைகளைத் தொடமுடியும்!குழந்தைகள் ,அவர்களுடைய  பாலியல் உறுப்புகளை அறிந்து வைத்திருத்தல் மிக்க அவசியம்.அதாவது உதடு ,மார்பு,பிறப்பு உறுப்பு ,பிட்டம் போன்ற இடங்களை ,யார் எப்பொழுது தொடவேண்டும் என்று அறிந்து வைத்திருக்க கற்றுக்கொடுத்தல்!தங்களுக்கு பிடிக்காத செயல் இழைக்கப்படுகின்றது என்று உணரும் அடுத்த கட்டம் ,அவர்களுக்கு மிக அருகில் யார் இருக்கிறார்களோ ,அவர்களிடம் ஓடி சொல்ல சொல்லுங்கள்!!யாராவது ஒருத்தராவது செவி கொடுத்து,அந்த பிஞ்சுகளின் பிரச்சனைகளைக் கேட்கும் வரை ,சோர்வடையாமல் இருக்க ஆவன படுத்த வேண்டும்.தங்களுக்கு வேண்டிய நபர் செய்த குற்றம் என்றால் ,அதை மூடி மறைக்கத்தானே பலரும் செய்கின்றனர்??ஆகவே ,பள்ளியில் ஆசிரியர்களிடம் மனம் விட்டு பேசலாம்,வீட்டில் அம்மாவிடமோ .அப்பாவிடமோ பேசலாம்!அல்லது நண்பர்களின் குடும்பத்தில் சொல்லலாம் என்ற விழிப்புணர்வை ,ஒவ்வொரு சிறார் மத்தியிலும் ஏற்படுத்துங்கள்!
                                                                        
          சில நேரங்களில்,இல்லை பல நேரங்களில் தசவதாரம் படத்தில் கமல் சொல்லும் ‘இறைவன் இருந்தால் நல்லது’என்ற வசனம் நினைவுக்கு வருது?அதற்கு காரணம் ,அழியப்போகுது என்று வெறும் வதந்தியாக (ரொம்ப வருத்தமாக இருக்குது அழியமாட்டிங்குதுன்னு???) சொல்லப்படும் ,இந்த உலகத்தில்,இதுபோன்ற ஈனச்செயல்களைச் செய்யும் காமுகன்கள் அழிவதில்லையே ???அவர்களுக்கு அடுத்தப்பிறவியில் அல்லது இறந்தபின்பு(இது சைவ சமய நம்பிக்கையன்று)தான் தண்டனைக் கிடைக்குமாம்???இது என்ன நீதி???