Saturday 12 January 2013

அனாமேதய அழைப்பு

                                                                                   
        சற்றுமுன்பு போனில் ஓர் அழைப்பு .’ஹலோ வணக்கம் செல்வி ,எப்படி இருக்கிங்க,முன் பின் கேட்டிராத குரல்.நம்பரும் தெரியாத நம்பர்.’நலம்’என்றேன்.நான் (ஒரு வங்கி பெயரைச் சொல்லி) அதில் குழந்தைகள் காப்புறுதி பாலிசி செய்கிறேன் ,நீங்கள் ஓர் ஆசிரியர் என்று நினைக்கிறேன் .அதான் உங்களோடு பேசணும்?இப்போ எனக்கு புரிந்து விட்டது.’என் நம்பர் எப்படி கிடைத்தது?என்றேன்.

         ’இங்கே கோவிலில் உங்கள் பள்ளியின் விளம்பர தாள்களைப்பார்த்தேன் .அதிலிருந்து எடுத்து அழைக்கிறேன்.நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ,அதான் உங்களை வந்து பார்த்து கொஞ்சம் பேசணும் செல்வி’மறுமுனையில்.அடடா !என்ன நல்ல எண்ணம்?நான் நலம் பெற ,நலன் விரும்பிகள் வராங்களே?மேலும் தொடர்ந்தார் ,அரை நாள் பள்ளி முடிந்து வீட்டில் என்ன செய்யறிங்க செல்வி ,ஒரு முயற்சி பண்ணலாமே ,பணமும் கிடைக்கும் ,நிறைய அனுபவங்கள் கிடைக்குமே?என்ன அக்கறை என் மேல்?

            ’சார் எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை சார்.என் வேலை ,டிரான்ஸ்போர்ட் ,டீயுசன் ,என் பசங்க ,அவுங்க பள்ளி பாடங்கள் (மேலும் முகநூல் ,இது ரொம்ப முக்கியம் அல்ல)தேவாரம் வகுப்பு ,சித்தாந்தம் வகுப்புன்னு.சோ ,நீங்கள் நினைப்பதுபோல எனக்கு நேரம் ரொம்ப இல்லை சார் என்று முடிப்பதற்குள் ,’செல்வி நீங்கள் ரொம்ப படபடப்பாக பேசறிங்க,எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்கிங்க ,முதலில் நான் வந்து என்னுடைய ப்ளான என்ன என்று சொன்னால் உங்களுக்கு ஆசை வரும் ,புரியும் பிறகு நீங்களாகவே செய்விங்க?’.இப்படி எத்தனை நலன் விரும்பிகளப் பார்த்திருப்போம்.’சார் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் சார்.நீங்கள் வேற ஆளைப்பார்க்கலாம்’என்றேன்.’என்ன முடியாது ,அப்படி என்ன பிசி?கொஞ்சம் குரலை உயர்த்தியபடி..இது எப்படி இருக்கு?என் ஸ்கேடியுலைஅவர் படிக்கிறாராம்?ஹ்ம்ம் அப்புறம் என்னத்த சொல்ல?

                  நான் தொடர்ந்தேன்’சார்  ஒருவருக்கு நேரம் ஒதுக்கி அவர் வந்து என்னிடம் பேசிவிட்டு ,பிறகு வேண்டாம் என்று சொல்வதை விட ,என் நிலையை விளக்குவது என் பொறுப்பு சார் ,அப்புறம் நீங்க சகிச்சிக்கிட்டு போககூடாது ,அதான் ஆரம்பத்திலே கட் பண்ணுகிறேன்’என்றேன்.
அவர் அடுத்து சொன்ன சொல் எனக்கு இரத்தம்  சூடேறி மண்டைக்கு டிங் டாங் அடித்தது போல் இருந்தது .’என்னங்க கொஞ்ச நேரம் ,உட்கார்ந்து டிவி பார்க்க நேரம் இருக்கும் ,சீரியல் பார்க்க நேரம் இருக்கு ,இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்ககூடாதா?அவர் வீட்டில் அவர் மனைவி செய்வதை எல்லா மனைவிகளும் செய்வாங்கன்னு அவர் நினைப்பது பக்கா தவறுதானே?இதுக்கு நான் அமைதியா பதில் சொல்ல முடியுமா?பெட்டை சிங்கள் கர்ஜிக்கும்தானே?


         ‘ஹலோ சார் ,நீங்க பார்த்த பெண்கள் அப்படின்னு என்னையும் அந்த லிஸ்டில் வச்சிடாதிங்க சார்.எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு ,மேலும் என் கணவரும் வங்கியில்தான் வேலை செய்கிறார்.இதுவெல்லாம் எனக்கு புதிய விசயம் அல்ல(பாலிசி)என்றேன்.இங்கே அவர் கொஞ்சம் எச்சிலை விழுங்கினார்.பிறகு சுதாகரித்துக்கொண்டு ,அப்படின்னா நீங்கள் இருவருமே சேர்ந்து வந்து என்னை சந்திக்கலாமே;என்றார் ஆர்வமாக !ரெண்டு பேர் பிசினசில் சேர்ந்திடுவாங்களே ,பின்னே ஆர்வம்தானே வரும்?

            சார் என்னையாவது சந்திக்க ஒரு வாய்ப்பு இருக்கு ஆனால் என் கண்வரை அப்படி நினைக்காதிங்க ,உங்க டைம் வேஸ்ட்டாகும் ,அப்புறம் நீங்கள் வருந்த வேண்டி இருக்கும்”என்று எச்சரித்தேன்.நம்ம 14 வருசம் (வனவாசம்) குப்பைக்கொட்டுறோமே தெரியாதா?இப்போ அவர் புத்திசாலித்தனமாக பேசுறாராம்.’என்னங்க செல்வி இது ,உங்க விருப்பத்தைதான் சொல்றிங்க ,அவர் விருப்பம் அவருக்குன்னு ஆசை ,எண்ணம் இருக்கும் ,அதுக்குள்ளே நீங்க  உங்களால முடிஞ்ச ரீசன்களை சொல்லி தடுக்கப்பார்க்கறிங்களே?என்றார்.ஒன்னு பட்டு திருந்தனும் இல்லை ,கெட்டு திருந்தனும்.அவர் இரண்டையும் ஒன்று சேர அனுபவிக்க நினைக்கிறார் போல?
   
          ’சார், என் ஆண் நட்புகளோடு நான் வெளியே போக எனக்கு அனுமதியுண்டு ,அவர்கள் என் வீட்டு வரவும் அனுமதியுண்டு ஆனால் வியாபார ரீதியில் வீட்டுக்கு ஆட்கள் வருவதை அவர் ஒத்துக்கொள்ளமாட்டார்’என்றேன்.பயப்பட வேண்டாம் ,நான் என் மனைவியுடன் வருகிறேன் .ஒரு 10 அல்லது 15 நிமிடம் பேசினால் அவர் மனம் மாறலாம் ‘இப்படி இரு பேராசை அவருக்கு பாவம் ?ஒரு நாள் என் கணவரின் நெடுநாளைய நண்பர் ஒருவர் ,இரவில் போன் செய்து ,உன் வீட்டு முன்னால் நிக்கிறேன் ,கதவைத் திற ‘என்றார்.(இது ஓர் உண்மை சம்பவம்).என் கணவரும் ‘அடடா சொல்லாமல் வந்துட்டியே,இரு வரேன் என்று டிவியை ஆஃப் செய்து வி.ட்டு போனார்.நல்லவேளையாக நண்பர் ,’இல்லை ஒரு பிசினஸ் விசயமாக பேச வந்தேன் ,அதான் ‘என்றார்.வெளியே எழுந்து போன கணவர் ,அப்படியே உடகார்ந்துவிட்டு , டேய் நாங்கள் எல்லாம் உறங்கி விட்டோம் ,வேறுநாளில் வா’என்று அலட்சியம் செய்து அனுப்பிவிட்டார்.

                பிறகு சில வருடங்கள் அதே முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் போன் பண்ணினார் அந்த இரவு நண்பர் .அதே இரவு பத்து மணிக்கு .நானும் என் மனைவியும் வீட்டு வருகிறோம் .நாங்கள் உடல் ஸ்லிம்மிங் டிரெஸ் விக்கிறோம்.என் மனைவி உன் மனைவியிடம் பேசனுமாம்.இதோ வருகிறேன் ‘என்று ஆர்வமாய் சொல்ல ,என் கணவர் வெளியே போனார்.ஒரு பத்து நிமிடம் கழித்து வீட்டுக்குள் வந்து ;நமக்கு வேலை வெட்டி இருக்கு ,இவர்கள் வந்து லெக்சரிங் செய்யும் நச்சரிப்பை காது கொடுத்து கேட்க எனக்கு நேரமில்லை .இனிமேல் பிசினஸ் விசயமாக என்னைப்பார்க்க வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றார் கோபமாக.ஆனால் என் கோபமோ வேறு ,அதெப்படி ஸ்லிம்மிங் டிரெஸ்  அதுவும் என்னிட்ம்?என்னைப்பார்க்க அவ்வளவு குண்டாகவா இருக்கு?இனி அந்த மனைவியோடு பேசுவதில்லை.நமக்கு இதுவெல்லாம் மானபிரச்சனையாச்சே?நான்சென்ஸ் ஃபெல்லொவ்.ஆனால் இந்த கதையை நான் அவரிடம் போனில் சொல்லவில்லை.

         அப்படிப்பட்ட என் கண்வரிடம் இவர் பிசினஸ் பேசப்போகிறாராம்.அதுக்கு நான் உடன் வரனுமா?சரிங்க செல்வி ,இருங்க உங்களுக்கு பயமா இருந்தால் ,என் மனைவியிடம் பேசுங்களேன் என்று போனைக்கொடுத்தார்.சரிதான் கணவன் மனைவி சேர்ந்தே அறுப்பாங்க போல.என் இன்னர் வாய்ஸ்?அம்மா செல்வி எப்படிம்மா இருக்கறிங்க?என்னைப் பலநாள் தெரிந்தது போல ,பேசினாங்க அந்த மனைவி.நலம் என்றேன்.அங்கிள் சொல்வதுபோல ,ஒரு 10 நிமிசம் டைம் கொடும்மா,நாங்களும் அப்படித்தான் எதிலும் ஆர்வம் இல்லாமல் ,ஆனால் இப்போ நல்லா சம்பாதிக்கிறோம்ம்மா,என்று அளந்தாங்க!

               சரி இனி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும் என்று ’சரிம்மா ,என்னால் யாராவது முன்னேறினால் எனக்கும் சந்தோசம்தானே ,சோ ஒருநாளைக்கு என் பள்ளி பெற்றோர்கள் ஒன்று கூடும் மீட்டிங்கில் ,உங்களை அழைக்கிறேன்,உங்கள் கண்வரை வந்து பேச சொல்லுங்கள்’என்று முடிப்பதற்குள் ,அந்த மனைவி ,ஐயோ ரொம்ப நன்றி ,என்னங்க இங்கே ஓடியாங்க ,அவுங்க உங்களை அவுங்க ஸ்கூலுக்கு வர சொல்றாங்க ‘என்றதும் ,அந்த அங்கிள் போனில் ,அம்மா ரொம்ப நன்றிம்மா ,உடனே சொல்லும்மா ,எப்போ வரனும் ,சீக்கிரம் முடிவு பண்ணும்மா.உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பாய்.இப்போதான் எனக்கு புடிச்ச மாதிரி பேசற !எப்படி இருக்கு?

          நானும் ‘சரிங்க ,எனக்கு நேரம் இருக்கும்போது சொல்றேன் ஆனால் என் பெற்றோர்களை நச்சரித்தால் அப்புறம் நானே எல்லோரிடமும் உங்க போனை அவொய்ட் பண்ண சொல்லுவேன் ‘என்றேன்.இல்லைம்மா ,இல்லைம்மா நீ இவ்வளவு தூரம் உதவி செய்வதே மேல் ‘என்று முடித்தார்! அவர் இலக்கு என்ன என்பதை சரியாக புரிந்து கொண்டேன் ,நச்சரிப்பு தொடராமல் இருந்தால் சரி,ஆனாலும் அவர் கடைசி வரையில் ,உங்கள் பள்ளிக்கு என்னால் ஆன ஏதாவது உதவிகளை செய்கிறேன் என்று சொல்லவே இல்லை ,அதான் எனக்கு இன்னும் ஆச்சரியம் போங்க.

Tuesday 8 January 2013

என்.ஜி.ஓவிற்கு ஒரு மடல்



    I am Ms.Selvi ,a head teacher  from Tadika Sinar Cahaya Jaya working with CHILD  since 2005.First of all I would like to express my greatest gratitude for having  confidence in joining myself as a CHILD teacher. I was literally learned and improved myself as an early childhood educator once involve myself with this organisation.CHILD  is a non profit organization that carry out many benefits for both teachers and their children.We as teachers ,really enjoying many facilities which are difficult to be matched by other private kindergarten.

      A non profit organization with abundance experience in early child education under  the leader ship of Dr.Ingkaran and his devoted team  managing teaching curriculum and methodology. CHILD  prepared experienced teachers who are constantly being exposed and trained by qualified trainers from HPP. A sound start from Tamil education  embarks every parents to register their children in CHILD kindergartens. .Many tamil preschools has come across various change and lots of improvement as well progress throughout the period since  CHILD adopted  them.It was not an easy task to achive this present status.It cannot be denied also that many bodies have played their role for the current status.

     Our  annual  combine activities among Selangor preschools  like sports ,story telling ,tevaram competition and graduation helping our CHILD children to upgrade themselves in both academic and co-curriculum. Monthly meetings and workshops also an important  activities for CHILD teachers  .Helping others problems and find solution in both teaching and learning is a golden opportunity  when work as a team.

    No doubt  to say that CHILD has mold and put it’s utmost attempt to create and produced skilled teacher to our society.I take this opportunity to thank Dr.IyangkaranKunaletcuhmi  for their kind support and  service towards tamil preschools and their teachers.