Sunday 28 August 2011

ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்!!!!!!!!

ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்

தினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோணுது !’ என்று.
                         தினமும் இதைக் கேட்ட கணவன்,அன்று பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன்? நீ ஒரு நாளைக்...கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான்! மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது.
இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்??இறுமாப்பு கணவன் கேட்டபாடில்லை!!!!
                 மனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள். தொடங்குகிறது யுத்தகாண்டம் !!! காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்ளைகளை வினவ:ஐயோ அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு ! என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று அப்பககல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது!’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். சரி !சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.
              தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…ட்ரிங் ட்ரிங் ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர்! தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன ??என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்! பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,இதற்கு மேல் எங்கே குளிப்பது? என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.
அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது ! துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள்: மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ ! என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது!!பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்!, கேஸ் தீர்ந்துப் போய்விட்டது!பக்கத்துவீட்டுக்காரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ்! பின்னாலே பள்ளி பஸ் ‘பொங் பொங்’ என்று ஓலமிட்டு வீட்டு வாசல் முன் வந்து நிற்கிறது.
அப்பா,என்ன சமைத்தீர்கள்? என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா!
              ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு !கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன் என்று சொல்லும் பொழுதுதான் உணர்கிறான்; வீட்டில் கார் இல்லை என்று???செய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.வீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை???’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது!!மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா ? துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன!!

        காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் !!!!!!!
                                                                 


உன்னால் முடியும்(என்னால் முடியவே இல்லை!!!!!)

’உன்னால் முடியும்’ என்ற ஒரு தன்முனைப்பு(அப்படின்னு,அவுங்க சொல்லிக்கிறாங்க)நிகழ்ச்சிக்கு,நண்பனின் அன்புத்தொல்லையால்(வேறு வழியின்றி) போக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்!!!!
நிகழ்ச்சி ,மாலை மணி ஏழுக்குன்னு சொல்லி,மாலை மரியாதை..அந்த கழுதை,இந்த கழுதைன்னு!மணி வெற்றிகரமாக 8.30(ஏற்பாட்டுக்குழுவுக்கே??தன்முனைப்பு,தாளம் போடுது போல!!!)..
நிகழ்ச்சி ஓடுது,ஓடுது......ஓடுது .முடிவே இல்லை?பெரிய பெரிய ர
ம்பங்களைக் கொண்டுட்டு வந்துருந்தாங்க பேச்சாளர்கள் எல்லோருமே!!
உன்னால் முடியும்...நிகழ்ச்சியும் முடியல,என்னாலேயும் முடியல(பெரிய பெரிய கொட்டாவி, என்னுள்ளிருந்து வெளியேற்றம்) ஏற்பாட்டுக்குழுவுக்கும் ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுக்க முடியல!!!!!!இப்படியாக எதுவுமே முடியல....முடியல...முடியல.....ஆனால் நிகழ்ச்சியின் பெயர் :’உன்னால் முடியும்’.இருப்பினும் ஒரு இடத்தில்,முடியும் என்ற சொல்லை பயன்படுத்த முடிந்தது!!!!!!!!!!!!!!!எங்கே???????அதாங்க..............’நிகழ்ச்சி எப்படா முடியும்னு இருந்த்து!!!!
சக நண்பர்களே,இனிமேல் என்னை அழைத்து போகும் முன்.................(யோசிங்கப்பா??)
***ஆனால் ஒன்று,நான் அடைந்த நன்மை:ரொம்ப நாட்களுக்கு பிறகு,என் அருமை நண்பர்களைப் பார்த்து சுமார் இரண்டு மணி நேரம், நல்லா பேசி,சிரித்தோம் பின்னால் இருக்கையில்அமர்ந்து கொண்டு (நிகழ்ச்சியை யார் பார்த்தா???)

                                                                                           





Thursday 25 August 2011

என் முதல் நேர்க்காணல் அனுபவம்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு,பள்ளி முடித்தவுடன்(ரொம்ப படிக்கல??),தற்காலிக ஆசிரியர் வேலைக்கு (கிடைக்கும் என்ற நம்பிக்கையில்)விண்ணப்பம் செய்து விட்டு (S.I)யாக!!! வீட்டில் இருந்தேன்.
அந்த நேரத்தில்தான் ,அந்த ஜாப்பானியர் நிறுவனத்தில் நிறைய ஆட்கள் தேவைப்படுதாம்(எஸ்.பி.எம்)எங்கள் ஊர் பெரிய படிப்பு(செகண்டரி லெவெல்)தகுதி என்றும் கேள்வியுற்று சென்றேன்.

   அப்பா காலையிலே காரில் அனுப்பிவிட்டு,’போகும்பொழுது பஸ்ஸில் போய்விடுமா, என்றும் (12பி) என்ற பஸ் வரும்மா என்று சொல்லி சென்றார்.'ஆனால் ஒரு பஸ் போய்ட்டா,மீண்டும் ரெண்டு மணி நேரமாவது ஆகும்மா பார்த்து என்று கூறி ஐந்து வெள்ளி கொடுத்து சென்றார்!
காலை பத்து மணிக்கு என் பெயர் அழைக்கப்பட்டது.அறைக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்தால்,வ்ழக்கம்போல் மலாய்க்காரர்(ன்)கள்...(சரியான இடத்தில் தவறான ஆட்கள்??)என் வயித்தெரிச்சல்!!!
                             சம்பந்தம் சம்பந்தமில்லாத கேள்விகள்(இது அவர்களின் கலாச்சாரமாச்சே??).நானும் புத்திசாலித்தனமாக(எனக்கு ஒரு நெனப்பு)பதில் கூறி சமாளித்தேன்.இறுதியாக ஒரு கேள்வி கேட்டான்’கூனன் எப்படி தூங்குவான்??என்று.'உன்னையும் என்னையும் போல கண்ணைமூடித்தானே என்றேன்!அப்படி சிரித்தான்!!.இதற்கு முன்பே இதைப்பள்ளியில் கேட்டாகிவிட்டதே???’ சரி பாஸ்,நீ வேலைக்கு வரலாம் என்றனர்(பாவம் கம்பெனிக்காரன்?/)வெளியே வந்தேன்,ஏதோ அமைச்சர் பதவி கிடைத்தாற்போல ஒரு மகிழ்ச்சி!!!அங்கே ஒரு இன்ஸ்டண்ட் தோழி கிடைத்தாள்.அதெல்லாம் நமக்கு கைவந்த கலையாச்சே??சரி வாங்க பஸ்ஸ்டாண்ட் போவோம் என்று நடக்க ஆரம்பித்தோம்!!அந்தோ பரிதாபம்,அப்பா சொன்ன 12பி பஸ் விருட்டென்று எங்களைத் தாண்டி போனது??ஷாம் நிலைமைத்தானெ எனக்கும் போல??ஐயோ ,என்ன செய்ய??என்று திருட்டு முழிமுழித்தோம்(எப்போதுமே அப்படித்தானே)???
ஒரு பத்து நிமிடம் கழித்து,தூரத்தில் ஒரு மோட்டார் வண்டி எங்களை நோக்கி!!ஏய் மாமா என்று அந்த தோழி ஓடினாள்!!!ஐயோ அவள் தப்பிச்சாளே என்று கோபம்தான்(எப்படி என் கூட இருந்து கஷ்டபடனுமே??).கிளம்பிபோனாள்......
                          சுமார் அரைமணி நேரம் கழித்து,அதே மோட்டார் மீண்டும்..’என்னங்க,பஸ் இன்னும் வரலியா??என்றார் அதே மாமா!!’இல்லை,காணோம் என்று சொல்லி முடிப்பதற்குள்,’சரி வாங்க நான் போய் விடுகிறேன்’என்றார்!’இல்லை வந்து ....பஸ்..இல்லை அப்பா’என்று முடிப்பதற்குள் ,அந்த நல்ல மாமா’ஹலோ,உங்க தோழி(இன்ஸ்டண்ட்)என் மனைவியின் தங்கைதான்!ஒன்னும் பயப்படாதிங்க,இந்தாங்க புடிங்க..இதுக்கு மேல் நின்னா,உங்களுக்குத்தான் ஆபத்து என்றார்!(அப்பாவும் சொன்ன ஒன்றுதான்,காரணம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்???)..அரை மனதோடு ஹெல்மெட்டை வாங்கினேன்!!;தோ பாருங்க,என் மோட்டார் எண்பட்டையை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்!என் பெயர்...விலாசம்..அனைத்தையும்..சொல்லிமுடித்தார்!.’ச்சே!,இனியும் என்ன’என்று ஏறி உட்கார்ந்தேன்.’ஆனால் ஒன்று ,உங்களை நான் 8வது மைலில் விடுகிறேன்..அங்கிருந்து நிறைய 12பி போகும்..எப்படியாவது போங்க;என்று ஒரு நிபந்தனை வேறு!மோட்டார் பத்தே நிமிடத்தில் போய் நின்றது!நன்றி கூறினேன்!

                      மீண்டும் அரை மணி நேரம் ஆனது!!!!ஐயோ!அப்போதெல்லாம் ,மொபைல் வசதி,ஏன் பொது போன் வசதியே குறைவுதான்???செய்வதறியாது நின்றுகொண்டிருக்கையில்,ஒரு லாரி வந்து நின்றது!’ஏம்மா..எங்கே போகணும்??'பூச்சோங் அங்கிள்,நான் அவருடைய மகள் என்று அப்பாவின் பெயரைக் குறிப்பிட்ட மாத்திரத்தில் லாரியிலிருந்து கதவைத் திறந்து ஓர் உருவம் இறங்கி’வாம்மா,வந்து உட்கார்’என்று எனக்கு வழிவிட்டு பின்னால் ஏறி அமர்ந்துகொண்டார்(அப்பாவின் பெயரில் அவ்வளவு மரியாதை!!)பிறகு லாரி அங்கிளும், அவர் பங்குக்கு பேட்டி எடுத்து முடித்து’சரிம்மா,நான் உன்னை 16 மைலில் இறக்கிவிட்டு ,வேறு இடத்திற்கு போகிறேன்..அங்கிருந்து டாக்சி எடுத்தால்..நம் கம்போங்( தற்பொழுது அத்திப்பட்டி கிராமம்)போய் விடலாம்'என்று ஐடியா சொல்லி இறக்கி விட்டார்!!!!!!

           இறங்கி ,ஒரு ஐந்து நிமிடங்களில் கார் ஒன்று என்னைத் தாண்டி போய் நின்று மீண்டும் ரிவர்சில் வந்து,’செல்வி ஏன் இங்கு??சரி வா’என்று ஒரு குரல்!என் தாய்மாமாவின்(போலிஸ் உயர் அதிகாரி)உற்ற தோழன்!

ஒருவகையாக வீடு வந்து சேர்கிறேன்,பின்னாலேயே அப்பாவின் கார்!!ஏம்மா ,இப்போதான் வருகிறாயா??மணி சாயங்காலம்  ஐந்தாகிவிட்டது!!!!
        இவ்வளவு இன்னல்களுக்குப் பிறகும் இந்த வேலைக்குபோக வேண்டுமா???என்று யோசித்து....!!பிறகு தடைக்கற்களே படிக்கற்கள் என்று அந்த வேலையில் சேர்ந்தேன்......................வாழ்க்கையிலும் செட்டில் ஆக துணை புரிந்தது அந்த வேலைதான்(மண்ணாரன் கம்பெனி மானேஜர்)