Sunday 26 August 2012

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

மனித மனம் சில விசயங்களுக்கு ஆட்கொண்ட மனம்.அதில் இசை முதன்மை வகிக்குது ,அது என் மனம்.சில நேரங்களில் என்றோ,பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்கள் ,நம் மனதில் மிக பசுமையாக சில நினைவுகளை வருடி செல்லும்.அதில்  இனிமையான நினைவுகளும் உண்டு ,  கசப்பான நினைவுகளும் உண்டு. அந்த வகையில் ,ஒரு சில பாடல்களை நான் கேட்கும்பொதெல்லாம் ,என் கண் முன் நிழலாடும் சில சம்பவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

                                                                                 
அந்த வகையில் முதலாவதாக வரும் பாடல்:

http://www.youtube.com/watch?v=v7D7qcMX3x0
மருத மலை மாமணியே முருகையா’(தெய்வம்).

இந்த பாடலைக் கேட்டால்,எனக்கு என் அம்மா வழி தாத்தா (திரு.குஞ்சாம்பு)அவர்களின் இறப்புதான் நினைவுக்கு வரும்.அந்த சமயம் எனக்கு வயது ஐந்தோ?ஆறோ இருக்கும்.என் அம்மா சத்தம்  போட்டு அழுது நான் பார்த்தது அன்றுதான்.நாங்கள் இறப்பு வீட்டையடைந்த பொழுது ,என் அம்மாவைக் கட்டியணைத்து அழுத என் மாமாக்கள்,சின்னம்மாக்களின் அழுகைக்கு இடையே ,அங்கே ஒலியேறிய பாடல் .அன்றுமுதல் இந்தபாடலைக்கேட்டால் ஏதோ ஓர் இழப்பை நினைவுபடுத்தும்.(இறப்பு வீட்டில் முன்பெல்லாம் பாடல்கள் ஒலியேறுவது வழக்கத்தில் இருந்தது)


http://www.youtube.com/watch?v=h4IHiOAZ918(நீயா)
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

எங்கள் குடும்பமும்  என் தோழியின் குடும்பமும் ,இந்த படம் பார்க்க தியேட்டருக்கு குடும்பமாக சென்றோம்.வறுமையில் இருந்த காலங்களில் கூட என் தந்தை எங்களை குடும்பமாக அழைத்துச் சென்று நாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம்.இரு குடும்பங்களாக சென்றோம்,இன்று ,என் அப்பா இல்லை,என் தோழி(அண்ணியின்)அப்பா அம்மா இல்லை,அவளுடைய அண்ணன் அக்காளும் கூட இறந்துவிட்டனர்.இன்றும் இந்த பாடலைக்கேட்டால் ,இறந்து போன அந்த ஆன்மாக்களும் அன்றைய பழைய தியேட்டர்,அன்று திண்ண தின்பண்டம்,குளிர்பானம் இவை யாவும் என் கண் முன்னே!

http://www.youtube.com/watch?v=pECeEaM_2tA&feature=related
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே(சிவகாமியின் செல்வன்)

என் மாமாவின் உறவு வ(லி)ழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு பெண்ணைக்கூட்டிக்கிட்டு ஓடி வந்து ,ஒரு விபத்தில் மரணமடைந்தார்.(என் பதில் எழுதியுள்ளேன்)அந்த இறப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் வருத்திய ஒன்று.அவர் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்றனர்.வீட்டில் எல்லோரும் சென்றனர்,நானும் என் தங்கையும் செல்ல தடை.வீடே வெறிச்சோடிக்கிடந்த சமயத்தில் ,எங்கள் வீட்டு வானொலியில் எங்களுக்காகவே ..இல்லை அந்த காதலிக்காகவே ஒலியேறியது போல இந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=kmyzafV8Vko
ஏய் கிளி இருக்கு ,ஏரிக்கரை இருக்கு(முதல் மரியாதை)

இந்த படம் ரிலீசான புதிதில் ,எங்கள் கிராமமே இந்த பாடல்களில் மூழ்கிகிடந்தது. பாடல்கள் பட்டி தொட்டிய்யெல்லாம் ஒலித்தது.வைரமுத்து அழகான வரிகளை வர்ணித்து கூறிய பின்பு கேசட்டில் பாடல்கள் ஒலியேறும்.பசுமையான,ஓரளவு என் கிராமத்தைப்போலவே ,இந்த படம் ஷூட்டிங் செய்த கிராமத்தின் சூழல்.இன்று கேட்டாலும் என் வீட்டு பின்னால் இருந்த குட்டை,கொய்யா மரம் ,கோழிகள் ,ஆடுகள் என்ற கிராமிய வீட்டுக்கு செல்லும் என் நினைவு.


http://www.youtube.com/watch?v=dGhkH958nHo
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை(சிவந்த மண்)

நான் முதன்முதலாக வெளிநாடு (முதன்முறையாக குடும்பத்தை விட்டு மூன்று மாதங்கள்)செல்லும்போது ,என் உடன் பல பாடல்கள் கொண்ட கேசட்களைக் கொண்டு சென்றேன்.விமான நிலையம் சென்று விடைபெற்ற அந்த தருணம்,என் கண்ணில் மாலை மாலையாய் கொட்டிய கண்ணீர்.என் குடும்பமும் அப்படியே.விமானத்தில் ஏறி உட்கார்ந்தும் என் அழுகை நின்றபாடில்லை.என் அருகில் அமர்ந்த என் தோழி ,என்னை மகிழ வைக்க ஒரே வழி இதுதான் என்று என் கையில் இருந்த வாக்மென்(அப்போவெல்லாம் அதுதானே பயணத்தில் கைகொடுக்கும் வனொலி) என் காதுகளில் போட்டு ,ப்ளேய் பட்டனை அழுத்தினாள் ..நான் நடுவானில் ..என் காதில் ஒலித்த இந்த பாடல் ..ஐயோ என் கண்ணீருக்கு மருந்தாக...இன்றும் மனதில் சோகம் என்றால் ,மொபலை அழுத்துவேன்..என்னை நடு வானுக்கு பறக்க விடும் ..பாடல்!

http://www.youtube.com/watch?v=im8ounEVVwM
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

என் கண்வர் என்னைப் பெண் பார்த்து சென்ற புதிதில் ,சரியாக ஒரு மணிக்கு அவருக்கு மதிய உணவு நேரம்.எங்கள் அலுவலகத்தில் 12.30-க்கு லன்ச்.எல்லோரும் உணவருந்திவிட்டு ,கொஞ்ச நேரம் அவரவர் மேஜையில் ஒரு குட்டி தூக்கம் போடும் நேரமாக பார்த்து ,ஒரு மணிக்கு எனக்கு போன் வரும்..இது நாலைந்து நாளுக்கு தொடரவே ,அந்த ஒருமணிக்கு யாருக்கு போன் வந்தாலும் ,இந்த பாடலைப்பாடிக்கொண்டே போனை எடுப்பார்கள் என் சக தோழிகள்.நாளடைவில் என் சீன மற்றும் மலாய்க்கார நண்பர்களும் இந்த பாடலைப் பாடித்தான் ,போனை என்னிடம் கொடுப்பார்கள்.அது ஒரு கனாக்காலம்.

http://www.youtube.com/watch?v=4mMVY2zExis
இயற்கை எனும் இளையகன்னி ஏங்குகிறாள்(சாந்தி நிலையம்)

நானும் என் தோழி இளவரசியும்,ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த சமயம் ,ஒருநாள்  ஏதோ ஒரு தப்பினால் ,என் லைன் லீடர் (line leader)என்னைத் திட்டிவிடவே எனக்கு கோபம்.முதல் நாள் நடந்த இந்த சம்பவம் ,என்னைப்பாதிக்கவே ,மறுநாள் வேலைக்கு விருப்பமின்றி சென்றேன்.என் நிலையை அறிந்த இளவரசி ,’அக்கா எனக்கும் மூட் இல்லை,வாங்க ,கிளினிக் போய் பொய் சொல்லி மருத்துவ விடுப்புக்கு முயற்சிப்போம் ,கிடைத்தால் வெளியே எங்கேயாவது போய் நிம்மதியாக உட்கார்ந்து பேசிவிட்டு ,வீட்டுக்கு போகலாம்;என்றாள்.எனக்கு தேனாய் இனித்தது அந்த ஐடியா.இருவரும் கிளினிக் புத்தகம் எடுத்துக்கொண்டு ,கிளினிக் போனோம்.என்ன ஆச்சரியம் ,காது வலி ,வயிற்றுப்ப்போக்கு என்று மருத்துவரை ஏமாற்றி லீவ் கிடைத்தது.எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..வெற்றி ..வெற்றி...இருவரும் பேருந்தில் ஏறி ,அங்கேயும் என் வாக்மென்,இருவரின் காதிலும் ,ஒன்று என் காதில்,மற்றொன்று அவள் காதில் ,ப்ளேய் பட்டன் அழுத்தியபோது ஒலித்த கானம் ,இயற்கை....!இன்றும் வானொலியில் பாடல் ஒலியேறினால் ,அவள் என்னை அழைத்து’அக்கா ,பொய் சொல்லி வாங்கிய எம்.சிக்கு கிடைத்த பாடல் ,கேளுங்க’என்று நினைவு படுத்துவாள்.


http://www.youtube.com/watch?v=NCtON6_mpzY
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.(ஜீன்ஸ்)

என் கணவர் முதன்முறையாக என் அண்ணனின் அனுமதியோடு என்னை வெளியே அழைத்துச் சென்றது இந்த படம் பார்க்க.அழகான இருள் ,முதன் முதலாய் எங்களுக்கு கிடைத்த தனிமை.அருமையான் சூழல் ,ஆனால் இருவருமே ஒரு வார்த்தைக்கூட பேசாமல் ,இந்த பாடலில் லயித்துபோனோம் என்பதுதான் பகிரங்கமான உண்மை.அந்த அளவு சங்கர் படத்தை இயக்கிய விதம் .எதையும் ரசிக்க முடியாமல் முதன்முறையாய் சந்திக்கும் காதலர்களையே தன் வசம் இழுத்துக்கொண்ட பாடல்.இன்றும் அந்த பாடல் ஒலித்தால் ,திருமணமாகாத அந்த கணங்களுக்குள்  நான் மூழ்கிவிடுவேன்.


http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தத(இளைமை ஊஞ்சலாடுகிறது)

எங்கள் ஊர் வானொலியில்’ 80-களின் பாடல்கள்’ என்ற தலைப்பில்,ஒரு நிகழ்ச்சி ஒலியேறும்.நான் முதன்முறையாக எழுதி அனுப்பிய இந்த பாடலுக்கான கடிதம் மிக சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இந்த் பாடலை ,என் பெயரை அறிவிப்பாளர் வாசித்து ‘செல்விக்காகவே இந்த பாடல்’என்று ஒலியேற்றிய  விதம் ,ஐயோ எனக்கு அன்று முழுவதும் போன் அழைப்புகள்,பாராட்டுகள்!நான் தீவிரமாக வானொலிக்கு எழுத தூண்டிய பாடல்.


http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0110'&lang=en
உன்னைக்கண்டு நான் ஆட(கல்யாண பரிசு)

தீபாவளி என்றாலே எங்கள் ஊர் வானொலியில் அன்று முதல் இன்று வரை இந்த பாடல்தான் முதல் வரிசையில்.எத்தனை தீபாவளி பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக பாடலே இல்லை  என்றுதான் சொல்வேன்.அதிலும் அந்த காலத்தில் அப்பா இருக்கும்போது ,அவருடன் கொண்டாடியே தீபாவளியை நினைவுபடுத்தும் பாடல்.
(ஆனால் சந்தோசமாக ஒலிக்கும் பாடல் கிடைக்கவே இல்லை)

                                                                                                                                                           
                             
.
                                     










10 comments:

  1. பாட்டு கலக்சன் எல்லாம் அருமையா இருக்கு.....!

    ReplyDelete
  2. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா//

    இந்தப்பாட்டு ஹிந்தியிலையும் கலக்கோ கலக்குன்னு கலக்கிருச்சு...!

    ReplyDelete
  3. ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை(சிவந்த மண்)//

    டவுசரை கையில் பிடித்துக்கொண்டு, டயர் சைக்கிள் ஓட்டிக்கொண்டே [[ஓடிக்கொண்டே]] பாடித்திரிந்த காலம் நினைவுக்கு வருது ம்ம்ம்ம்!!!

    ReplyDelete
  4. ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்//

    எப்போ இப்பாடலை கேட்டாலும் மனசு பஞ்சாகி லேசாகிவிடும் கொஞ்சம் வலியும் இருக்கும் பாடல் இது...!

    ReplyDelete
  5. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.(ஜீன்ஸ்)//

    பாட்டை ரசிச்செனோ இல்லையோ ஐஸ்வர்யாவை மிகவும் ரசிச்சேன் இந்தப்பாடலில்...! [[இப்போ இல்ல அப்போ...ஆத்தீ]]

    ReplyDelete
  6. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தத(இளைமை ஊஞ்சலாடுகிறது)//

    காலத்தால் அழியாதவைகளில் இதுவும் சேரும்...!!

    ReplyDelete
  7. ஒரே பிளாஷ் பேக் போல...நடக்கட்டும்...நடக்கட்டும்:-) இதுல இளையராஜா பாட்டுக்கள் மிகவும் கம்மியாக இருப்பதால் நான் ப்லாக் ஐ விட்டு உடனே வெளிநடப்பு செய்கிறேன்..:-)

    ReplyDelete
  8. அந்த ரெட்டை சடை கருப்பழகி செம அண்ணி...யாரு அது ?:-))

    ReplyDelete