Thursday 5 September 2013

முதன் முதல்...

             அண்மைய காலமாக ரொம்ப கனமான பாத்திரமாக மாறி, பதிவுகள் எழுதி தள்ளியாச்சு. சரி இப்போ கொஞ்சம் எல்.கே.ஜி லெவெலுக்கு இறங்கி நான் முதன் முதலாக என்ற தலைப்பில்  எழுதப்போறேன்.


  •            நான் ஸ்டூடியோவில் சென்று முதன்முதலாக பிடிச்ச படம் என் எட்டு வயது பிறந்தநாள் அன்று(என் அண்ணாவின் சட்டை அணிந்து)
  •                                                       

  •                நான் முதன்முதலாக படித்த பள்ளிக்கூடம் புக்கிட் ஜாலில்                                  தோட்டத்தமிழ்ப்பள்ளி.

  •                நாம் தியேட்டரில் அப்பாவோடு குடும்பமாக போய் பார்த்த முதல்                     திரைப்படம் ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ 

  •                நான் பார்த்த முதல் இறப்பு ,என் அம்மாவின் தந்தை திரு.குஞ்சம்பு                     அவர்கள்.

  •               நான் முதன்முதலாக (இறப்பினால்)பிரிந்த நட்புகள் என் தோழியின்               அண்ணா தம்பிராஜா அவர் தங்கை விமலா.(குளத்தில் விழுந்து                       இறந்து போனார்கள்)

  •              நான் முதன்முதலாக பெற்ற பரிசு ஆசிரியரிடம் ஒருவெள்ளி.

  •               நான் முதன்முதலாக சென்ற இடைநிலைப்பள்ளி விவேகானந்தா                     பள்ளி(மலேசிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்தகிருஷ்ணன்                    அவர்கள் படித்த பள்ளி)ஆனால் நான் ஒருநாள்தான் அங்கே                                 படித்தேன்!

  •              என் ஆரம்பப்பள்ள்யில் முதன்முதலாக இறந்துபோன என் தோழன்                 குமார்(தமிழ்நாட்டில் இருதய சிகிட்சைக்காக சென்று அங்கேயே                         இறந்துபோனான்).

  •              என் முதன்முதல் வலிமிகுந்த அறுவை சிகிச்சை ,என் காலில் .                            டாக்டர் என்னை ’லஃப்ஃபா’  வலிக்க வலிக்க என் காலை கத்தியால்                கிழித்து  உள்ளே இருந்த எதையோ அகற்றினார்.நான் அலறிய                          அலறல் ,என் அப்பாவே அழுதுவிட்டார்.

  •             நான் முதன்முதலாக பள்ளியில் நடித்த நாடகத்தில் இளவரசனின்                  தங்கையாக நடித்தேன்.என் பெயர் ஐயை!

  •            முதன்முதலாக பேசிய நாடக வசனம் ‘புலவரே இந்த செய்யுளின்                     பொருள் என்ன?’

  •              நான் முதலும் கடைசியுமாக அப்பாவிடம் வாங்கிய அடி                                        ,தோழியோடு சேர்ந்து சீனர் வீட்டில் முட்டைத் திருடியபோது.

  •             நான் முதன்முதலாக சென்ற வெளிநாடு ஜப்பான்.

  •                நான் முதன்முதலாக ஓட்டிய கார் (இன்னும் ஓட்டும் அதே                                   )மலேசிய புரோட்டோன் சாகா


  •              நான் எழுதிய முதல் எழுத்து  பத்திரிக்கையில் ’சாலை விபத்து’                       என்ற கட்டுரை.


  •             நான் முதன்முதலாக முழுவதுமாக படித்த முதல் கதை ‘தெருகூத்து             ‘(ராணிமுத்து)

  •              என்னை முதன்முதலாக உறங்க விடாமல் செய்த இறப்பு செய்தி என்            பள்ளி நண்பனின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான                                       கோர விபத்து செய்தி.


  •            இலக்கியப்பரிட்சைக்காக நான் படித்த முதல் நாவல் நெஞ்சினலைகள்


  •                முதன்முதலாக  நான் ஃபெயில் (சிகப்பு புள்ளி) பண்ணிய பரிட்சை                     குடியியல் .


  •                என் முதன்முதல் ஆண் ஆசிரியரின் பெயர் திரு.விஸ்வநாதன் .


  •               என் முதல் அண்டைவீட்டுத்தோழி சாந்தகுமாரி


  •                என் முதல் பஸ்பயணம் அப்பா வழி பாட்டி வீடு(ஜோகூர் மாநிலம்).


  •                நான் சந்தித்து பேசி படம் பிடித்துக்கொண்ட முதல் நடிகர்                                     சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.


  •                நான் முதன்முதலாக பதிவில் எழுதியது என் நட்புகளைப்பற்றி.

  •                
  •                 எங்கள் ஊர் வானொலியில் முதன் முதலாக என் பெயரை                                   அறிவித்து எனக்காக ஒலியேற்றிய பாடல் ‘ஒரு தங்கரதத்தில்                            பொன் மஞ்சள் நிலவு’


  •               நான் முதன்முதாலக வேலை செய்து பெற்ற சம்பள தொகை ரிம450


  •               என் முதல் வேலை அனுபவம் matsushita air cond company


  •                 எனக்கு முதன்முதலாக  அறுவை சிகிட்சை செய்து என் மகளை                        இவ்வுலகுக்கு கொண்டு வந்த மருத்துவர் மகப்பேறு நிபுணர்                              டாக்டர்.சிவகுமார்.


  •               என் முதல் பள்ளி தோழி சிவனேஸ்வரி (sumathi siva)

*************நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் ,இதை தொடர என் பதிவுலக நட்புகளை அழைக்கிறேன்!


10 comments:

  1. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனுபவப் பகிர்வு ...அருமை...

    ReplyDelete
  3. பாடத்தில் முட்டை வாங்காததால் திருடினீர்களோ????

    ReplyDelete
  4. அட... இதையே தொடர்பதிவாக அழைத்தால்? முயற்சி செய்யவும்...

    ReplyDelete
  5. தங்கள் பதிவைப் படித்ததும்தான்
    எனக்கும் பல "முதல்களை " நினைத்தும் பார்க்கும்
    எண்ணம் வந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    .பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . .

    ReplyDelete
  7. எல்.கே.ஜி சமர்த்து!ஞாபகப் பகிர்வு அருமை.

    ReplyDelete
  8. முதல்முதலாக என்னை பள்ளிக்கு நடந்தே அழைத்துச்சென்றது என் அக்காள் ஸ்ரீவிஜி. முதல்முதலாக செவித்தாய் வேலைசெய்தது - அக்காள் மகளுக்கு. முதல்முதலாக கேக்’கடைகளில் வாங்கித்தின்ன பழகிக்கொடுத்தது அக்காள் ஸ்ரீவிஜி. :P:P:P

    ReplyDelete
    Replies
    1. முட்டை களவாண்டதுக்கு நீங்களும் டீச்சரை போட்டு மிதிச்சிருக்கலாம், மிஸ் பண்ணிட்டீங்க விஜி ஹா ஹா ஹா ஹா....

      Delete
  9. மொத்த வரலாறே வெளியே கொட்டிட்டீங்களே டீச்சர்....அருமையான நினைவுகள்.....!

    ReplyDelete