Thursday 23 April 2015

(அ)நாகரீகமா?

                நாங்கள் வளரும்போதும் சரி ,எங்களைச் சுற்றியுள்ள அண்டைவீட்டுத் தோழிகளும் சரி, அந்த காலத்தில் பெண்பிள்ளைகள் உள்ளே அணியும் ஆடைகளை ,துவைத்த பிறகும்,வெளியே உலரப்போடவிடாமல் ,வீட்டின் உள்ளேயே மறைத்து உலரச் செய்ய சொன்ன அம்மாக்கள் இருந்த இதே பூமியில்தான், உள்ளே அணிந்திருக்கும் ஆடைகளை ,வெளியே காட்டிக்கொள்ளும் பெண்பிள்ளைகளின் பழக்கத்தையும் பார்த்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களை என்னச் சொல்ல?கிராம வாழ்க்கை போய்விட்டால் ,கற்றுக்கொடுக்கும் பழக்கமும்,கற்றுக்கொள்ளும் பாடமும் அப்படியே போய்விடுமா என்ன? ஆடைகுறைப்புதான் கற்பழிப்புக்கு காரணம் என சொல்லும் ரகம் அடியேன் இல்லை!இதையெல்லாம் பெற்றோர்கள் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறார்கள்?அல்லது கற்றுக்கொடுத்தும், கேக்காமல் திரியும் டீன் ஏஜ் பசங்களா?

               ஒரு கூட்டுக்குடும்பத்தில் கணவன் மனைவியாக ஒரு தம்பதி இருந்தால், அவர்கள் கணவன் மனைவி என்பது யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் உண்டு.அப்படி காட்டிக்கொள்ளாமல் பண்புடன் வாழ்ந்த காலம் போய்,இப்போ காதல் செய்ய தொடங்கியவுடன் ,அனைத்து செயல்களையும் செல்ஃபி அல்லது வீடியோவில் பதிவு செய்து உலகமே பார்க்கும் வண்ணம் செய்கின்றனர்!இறுதியில் எதிர்பார்க்காத விபரீதங்களை மட்டுமே கேட்கவும் காணவும் முடிகிறது!

               இதையெல்லாம் கேட்டால்,’பத்து வயசுல போட்ட சட்டையை ,இப்ப்போ போட முடியுமான்னு 'கேட்கறாங்கள். 'மாற்றம் வரும்போது மாறிக்கொள்ளுங்கள்' என்றும் விவாதம் பண்ணுகிறார்கள்.சரிதான் பத்து வயசு போட்ட சட்டையை இப்போ போடத்தான் முடியாது ஆனால் பத்து வயசுல 'அம்மான்னு' கூப்பிட்ட அன்னையை இப்போ 'அத்தைன்னா' அழைக்கிறோம்?
      ஏன் நமக்கு வம்பு?நம்ம வீட்டில் எல்லாத்தையும்  சரியாக நடத்துவோமே!

2 comments:

  1. மிகச்சரியான கேள்வி! புரிந்துகொள்ள வேண்டியவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள் என்ன செய்வது?

    ReplyDelete
  2. //நம்ம வீட்டில் எல்லாத்தையும் சரியாக நடத்துவோமே!//

    அதே தான்....

    ReplyDelete