Sunday 31 March 2013

ஏப்ரல் ஃபூல் கற்பித்த பாடம்(1/4/1987)



           
           1/4/87 என் சக தோழிகளுன் நான் சிற்றுண்டிக்கு சென்ற போது எல்லோரும் என்னைப்பார்த்து சிரித்தனர்.அந்த சமயம் அங்கே வந்த என் ஆங்கில ஆசிரியையும் சிரித்துக்கொண்டே வந்து ,என் சட்டையில் ஒட்டியிருந்த i am april fool என்ற துண்டு சீட்டை எடுத்து என் கையில் கொடுத்து விட்டு'who is yr naughty friend'என்றபடி நகர்த்தார்.பிறகுதான் தெரிய வந்தது,என் சக தோழிகளில் ஒருவளின் ஐடியா படி நடந்த கூட்டு சதி அதுவென்று.செய்த அவளுக்கு ஒரே சிரிப்பு நான் அவமானப்பட்டது.எனக்கு கோபம் இருந்தாலும் கொஞ்சநேரம் அவள் மகிழ்ச்சியாய் இருக்கட்டும் ,எனக்கும் இறைவன் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று விட்டுவிட்டேன்(எனக்கு யாராவது ஏதாவது செய்தால் ,அதை எப்படியாவது அவர்களுக்கு செய்யனும்..பழி வாங்குதல்)நல்லதா இருந்தால் இரு மடங்கு செய்வேன் ,தீயதாக இருந்தால் நல்லா வலிக்கும்படி செய்வேன்(நானும் சராசரி மனுசிதானே).ஆனால் இப்போ நான் நல்லபிள்ளை..ஹி ஹி ஹி நம்புங்களேன்.
                                                                     

             மறு ஆண்டு வந்தது.அந்த தோழி கொஞ்சம் மறதி ,அது எனக்கு சாதகமாக அமைய நான் அவளை எல்லோர் முன்னிலையிலும் 'உன்னை கணக்கு டீச்சர் கூப்பிட்டார்'என்று பொய் சொல்ல அவளும் வேக வேகமாய் போய்,அன்று அந்த டீச்சர் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்துகொண்டு வந்து ,எல்லோரும் அவளைப்பார்த்து சிரிக்க கோபமாய் போய் உட்கார்ந்தாள்.'நான் சென்ற வருடம் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன் ,நீ இன்னும் அப்படி நடந்துகொள்ளலாமா?என்றெல்லாம் கண் கலங்க கேட்டாள்.என்னுடன் கூட்டணி சேர்ந்த தோழியையும் கோபித்துக்கொண்டாள்.எனக்கு அவளைபபார்க்க பாவமாக இருந்தது 'நீ பிறரை விமர்சிக்கும்போது ,மற்றவரின் விமர்சனத்து தயாராக இரு'என்ற வாசகத்தை அவள் கேட்டதில்லைபோலும்.
                                                                     
              என் பள்ளி வாழ்க்கையும் முடிவுற்றது .என்னை அவள் மன்னிக்கவே இல்லை.இன்றும் அவள் எப்போதாவது பார்த்தாலோ பேசினாலோ (மனதில் ஒரு கோபம்)இருப்பதை உணர்வேன்.ஆனால் நான் அவளை ஒரு மனநோயாளியாகத்தான் பார்க்கிறேன்.பிறகு என்ன சொல்ல?ஆனால் அன்று அந்த தினம் ஒரு விசயத்தைப் புரிந்து கொண்டேன் ,கற்றும்கொண்டேன் அதாவது 'வேடிக்கையாய் கூட நண்பனின் மனதைப் புண்படுத்தாதே'என்பதை.என் வாழ்க்கையில் இன்னும் அதைக்கடைப்பிடித்து வருவதால் இன்னும் நான் நட்புலகில் மஹாராணி என்றே போற்றப்படுகிறேன்.ஆனால்  என் நட்புகளில் சிலரும் சரி,என் முக்கிய உறவுகளில் சிலருக்கு அந்த கெட்டப்பழக்கம் இருப்பது எனக்கு தெரியும் .அதாவது வேடிக்கையாக பிறர் மனம் புண்படும் படி பேசுவது!எனக்கு அவர்கள் மேல் பரிதாபம் மட்டுமே வரும் காரணம் அபப்டிப்பட்டவர்கள் ஒன்று மனநோயாளிகள் அல்லது பக்குவப்படாதவர்கள் என்ற லிஸ்ட்டில்தான் நான் வைத்துளேன்.அப்படிப்பட்டவர்களிடம் எனக்கு கோபம் வருவதில்லை என்பது இன்னுமொரு சிறப்பு.என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் என் பசங்களைப்போல் அவர்களும் முதிர்ச்சியடையாதவர்கள்!
                                                                           

3 comments:

  1. /// பக்குவப்படாதவர்கள்///

    சரியே...

    /// அவர்கள் என் பசங்களைப்போல்...///

    இது சிறப்பு...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சகோ நீங்க யாரு குரு இல்ல

    ReplyDelete
  3. வணக்கம் தோழி
    இன்று முதல் இந்த அன்புக் கூண்டுக்குள் நானும் அகப்பட்டுக்
    கொண்டேன் .வாழ்த்துக்கள் தோழி என்றும் இன்பத் தமிழோடு உறவாடி
    மகிழ்ந்திருப்போம் !

    ReplyDelete