Saturday 5 December 2020

ஈகம்!

            அடியேனின் பாலர்பள்ளி ஆசிரியர் பயிற்சியில், தமிழ்மொழி விரிவுரையாளராக அறிமுகமான ஐயா,தற்போது நினைவில் மட்டுமே வாழ்கிறார் என் பள்ளியைக் கண்காணிக்க வரும்போதெல்லாம்,நீ இறுதியாக எந்த புத்தகம் படிச்சம்மா ?அதிலிருந்து என்ன தகவல் பெற்றுக்கொண்டாய்மா?என்றெல்லாம் சோதிப்பார்.அவர் வரும் நாள் தெரிந்துவிட்டால்,அந்த கேள்விகளுக்காகவே நான் எதையாச்சும் வாசித்துவிட்டுப் போவதுண்டு!



ஆசிரியர்களுக்கு வாசிப்புப்பழக்கம் அதிகமாக இருக்கவேண்டும் என்று ஊக்குவிக்கும் ஒரு விரிவுரையாளர் களில் ஐயாவும் ஒருவர்.அநேக பாராட்டுகள் ,சிலவேளைகளில் திட்டும் கிடைத்ததுண்டு! பயிற்சி நாட்களில் ஐயா அவர்களுடன், கழித்த தருணங்களை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன!

நாளை (6 டிசம்பர் 2020) இரண்டாம் நாள் நிகழ்ச்சி இரவு 7.30 முதல் 8.30 வரை எழுத்தாளர்/சமூக செயற்பாட்டாளர் திரு. வ. முனியனுக்கு ஈகம் செய்யும் சிறப்பு அங்கம் திரு. வ முனியனின் கல்வித் துறை பணிகள் குறித்து திரு. மொ. முத்துசாமி அவர்களும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்து விரிவுரையாளர் திரு. சேகரன் முத்தப்பன் அவர்களும் உரையாற்றுவார்கள் நிகழ்ச்சியை நேரலையாக கீழ்க்காணும் வலையொளி (YouTube) இணைப்பில் (https://www.youtube.com/channel/UChXRF4yEtWZlcL9y4rQtnZA) காணலாம் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

ஐயா அவர்களுக்குச் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment