Friday 1 February 2013

மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுளா?

பிளிஸ் இதைக்கொஞ்சம் படிங்க!

மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது எவ்வாறு உண்மையாகும்?
மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று முதற்பார்வையில் நமக்கு தோன்றலாம்.மன்னிப்பவருக்கு எப்படி ஆயுள் நீடிக்கும்?மன்னிக்கப்பட்டவருக்கு ஆயுள் நீடிக்கும் என்பதில் அர்த்தமிருக்கின்றது’என்றெல்லாம் கேட்டாலும் கேட்கலாம்.மேலும் மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனதுக்குள் அடக்கிவைப்பதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு என்றும் நாம் எண்ணுவதிலும் விசயமிருக்கு.

நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றி விடுவோமானால் விறைப்பிலிருந்து விடுபட்டு உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி பிறக்கும் என்று அறிந்த ஒன்றே.ஆனால் மன்னிக்கிறவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருக்கும் நீடித்த ஆயுளை பெறுவான் என்பதிலும் சாஸ்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.


பாவம் மனிதத் தன்மைக்குரியதும் மன்னிப்பு இறைவனுக்குரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்படிக்கின்றன என்பதை அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒருவருக்கு மன்னிப்பளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவருக்குள் உருவாகின்றதனால் அவர் மகிழ்வுறுகின்றான்.ஆனால் தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரைத் துரத்தி வருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள்.


மகிழ்வுற்ற மனதுடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே டாக்டர் லாரன் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.

(இன்று வாங்கிய ஒரு புத்தகத்தில் படித்தை பகிர்ந்து கொண்டேன்)

No comments:

Post a Comment