Monday 26 October 2015

சினிமா கதைப்போல ஆன குடும்பக்கதை!



       சென்ற ஆண்டு பயின்ற மாணவன், எப்போதும் கட்டணத்தை தாமதமாகவே செலுத்துவான்.ஒருமுறை அவன் அம்மா பள்ளிக்கு வந்து 'சாரி டீச்சர்,அவன் அப்பா தற்போது இந்தோனேசிய சிறைச்சாலையில் செய்யாத குற்றத்திற்காக(???) தண்டனையை அனுபவித்து வருகிறார்.என்னுடைய வருமானம் மட்டுமே ஆகவேதான் கொஞ்சம் லேட்டாக கொடுக்கிறேன்'என்றார்.
        பிறகு தொடர்ந்தார் இவன் கருத்தரித்த நேரத்தில்தான் டிச்சர், அவர் சிறைக்குப்போனார்.இப்போ ஆறு வயசு ஆகிடுச்சி இன்னமும் போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்,கூடியவிரைவில் அவர் வந்தால்தான் அவன் அப்பா முகத்தைப்பார்க்க போகிறான்'என்றார்.'பையனும் ஒவ்வொரு முறையும்அப்பாவோடு போனில் பேசிவிட்டு வந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்வான்.'அப்பா வரப்போகிறார் டீச்சர்'என்பான்.இந்த வருடம் ஆரம்பப்பள்ளிக்குப் போய்விட்டான்.

காலையில் தகவல் கிடைத்தது, அவன் அப்பா சிறையில் மாரடைப்பால் காலமானார் !
மரணம் இயற்கை ஆனால் பையனின் நிலையை நினைத்து மனம் அழுகிறது.

1 comment:

  1. பையனை நினைத்தால் மனம் வருந்துகிறது..... வாழ்க்கையில் அவன் வெற்றி பெற எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete