Friday 14 March 2014

மாசற்ற மலேசியாவும்,மாஸ் விமானமும் !

நாட்கள் எட்டைத் தொட்டுவிட்டன,
எங்கே சென்றாய் எம் நாட்டு விமானமே?

மாசற்ற மலேசியா மேல்,
தூசுக்கள் கொட்டிக்கிடக்கும் வேளையில்,

மா(பேச்)சுக்களையும் கொட்டிச் சென்றாய்,
மாஸ் விமானமே!

அண்டைநாடும் வந்தன,
அயல்நாடுகளும் கைகோர்த்துக்கொண்டன,

அல்லாஹ்வையும் கேட்டேன்,
யேசுவையும் கேட்டேன்,
என் அப்பன் ஈசனையும் கேட்டேன்,

இன்னும் கிடைக்கவில்லையே?
இனியும் இறையை நம்பும் செல்வியே,

கடவுள் இருக்கிறானா?
இருந்தால் காட்டியிருப்பானே?

எள்ளி நகைக்கிறான்,
என் நாத்திக நண்பன்!

ஆன்மீக நம்பிக்கையும்
அசைவற்றுப்போகிறது,
அவனது இந்த சொற்கள்!

அமைச்சரும் அறிவிலியாக தெரிகிறான்!
ஆண்டவனும் அவன் பட்டியலில்
போய்ச்சேருகிறான்,

ஆத்திரம் மட்டுமே மிஞ்சியது,
அவர்கள் இருவரின் மேலும்!

தொலைக்காட்சியே !
நல்லதொரு பதிலைச் சொல்லாமல்,
எனக்கு நீ ,

தொல்லைக்காட்சியாக தெரிவது,
என் கோபமா?என் அறியாமையா?

இன்று இறங்கி இரந்து..இறந்துகொண்டிருக்கும்
என் உலக மக்களுக்கு 
இனிய செய்தியைச் சொல்வாயா?
ஈசா?யேசு?ஈசனே?

காத்திருக்கிறோம் கையில் பூக்களுடன்,
மலர் வளையங்கள் அல்ல,

என்பதையும்  இயற்கைக்கு,
இறுதியாகவும் உறுதியாகவும்
எச்சரிக்கிறோம்!
                


(இன்னும் ஏமாற்றைத்தயே கொடுக்கும் மாஸ் விமானத்தின் மேல் கோபம் எழுந்த போது மனதில் உதித்த வரிகள்)

1 comment:

  1. எந்த வித அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று வேண்டுகிறேன்...

    ReplyDelete