Friday 29 August 2014

மன்னித்தருள்க என் நட்புக்களே!




                    என் பிறந்தநாளில் என் இன்பாக்சுக்கு சுமார் ஆயிரம் மேசேஜ்கள் வந்தன.வந்துகொண்டும் இருக்கின்றன, சுமார் 1800 நட்புகளில் ஆயிரம் நட்புகள் இன்பாக்சில்தான் வாழ்த்து கூறினார்கள்,ஆனால் என்னால் அவை அனைத்துக்கும் பதில் அல்லது நன்றி சொல்ல முடியவில்லை நட்புக்களே.என்னை முதற்கண் மன்னியுங்கள். நான் ஒவ்வொரு மேசேஜ்களாக திறந்து பதில் போடமுடியாத நிலை மட்டுமே காரணம் அன்றி வேற எந்த காரணமும் இல்லை. மற்ற நாட்களில் நான் இன்பாக்சில் யாரிடமும் பேசுவதில்லை ,சாட்டிங் பழக்கம் எனக்கு இல்லை ஆனால் உங்கள் வாழ்த்துக்கு பதில் போடுவதும் அப்படியே என நினைக்க வேண்டாம்.அதற்காக வருந்துகிறேன், காரணம் முன்பு போல என்னால் கணினியில் நிறைய நேரம் செலவிடமுடியவில்லை நட்புக்களே.நான் முகநூலுக்கு (இணையத்துக்கு)மதியம் மட்டுமே வருகிறேன்.அதிலும் என் பிள்ளைகளுக்கு இந்த வருடம் தேர்வு.அவர்களும் என் கணினியை பயன்படுத்துகின்றனர்.அதுமட்டுமின்றி என் பல்கலைக்கழக இடுபணிகளையும் நான் செப்டெம்பர் மாதத்திற்குள் முடித்தாக வேண்டிய சூழ்நிலை.நிஜமாகவே நேரம் பற்றாக்குறைதான் காரணம்.
பலநட்புகள் இதனால் என்னிடம் கோபித்துக்கொண்டனர்.
மீண்டும் சொல்கிறேன் நட்புகளே...நேரம் போதவில்லை,பார்க்கும்போதெல்லாம்,முகநூலில் இருப்பதுபோல தோணலாம் ஆனால் பல வேலை பளுக்களுக்கிடையிடையே நான் வந்துபோகிறேன்.இது என் மிக நெருங்கிய சிலநட்புகளுக்கு புரியும்.
நான் நட்புகளை மிகவும் மதிப்பவள் . இந்த காரணத்தினால் நான் உங்கள் வாழ்த்துக்களை அலட்சியம் செய்கிறேன் என நினைத்துவிடாதிர்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் நிலையை புரிந்து கொள்ளவேண்டிக்கொள்கிறேன்!

3 comments:

  1. All the Best.
    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. எல்லாருக்கும் இதே பிரச்சினைதான் சகோதரி...
    எல்லாரும் புரிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துபவர்கள் யாரும் நன்றியை எதிர்பார்த்து வாழ்த்துவதில்லை.... பரவாயில்லை அக்கா....

    ReplyDelete